மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!

6


நியூயார்க்: சிறுபான்மையினரை துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் ஒரு நாடு மனித உரிமைகள் குறித்து சொற்பொழிவு ஆற்றுவது மிகவும் முரண்பாடானது என ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.


ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 60வது கூட்டம் சுவிட்ச்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடக்கிறது. 34வது கூட்டத்தில் நடந்த விவாதத்தின் போது இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அடுக்கியது. இதற்கு இந்தியா தரமான பதிலடி கொடுத்தது. அப்போது இந்திய தூதர் முகமது ஹுசைன் பாகிஸ்தானின் பாசாங்குதனத்தை கடுமையாக சாடி பேசியதாவது:

* சிறுபான்மையினரை துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் ஒரு நாடு எப்படி மனித உரிமைகள் குறித்து மற்றவர்களுக்கு போதிக்க முடியும்?



@quote@* மனித உரிமைகள் குறித்து சொற்பொழிவு ஆற்றுவது மிகவும் முரண்பாடானது. பாகிஸ்தான் தங்கள் சொந்த மண்ணில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதை நிறுத்த வேண்டும்.quote


* பாகிஸ்தான் தனது சொந்த உள்நாட்டு தோல்விகளைப் புறக்கணித்து, சர்வதேச மன்றங்களைப் பயன்படுத்தி இந்தியா மீது அவதூறு செய்ய மீண்டும், மீண்டும் முயற்சி செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement