'தினமலர்' நாளிதழுக்கு பெற்றோர் பாராட்டு பெற்றோர் பாராட்டு



குழந்தைகளுக்கு மகிழ்ச்சி

பள்ளிக்கு குழந்தையை அழைத்து வந்தபோது பயந்தனர். சக குழந்தைகளை பார்த்தபோது ஓடி விளையாடி மகிழ்ந்தனர். இங்கு, வழங்கப்பட்ட குழந்தைகளின் கூடிய புகைப்பட சான்றிதழ், குழந்தை பெரியவனாகி பார்க்கும்போது சந்தோஷம் ஏற்படுத்தும்.

-நித்யா, விருத்தாசலம்.



புதுவிதமான நிகழ்ச்சி

இது புதுவிதமான நிகழ்ச்சியாக உள்ளது. இதேபோன்ற நிகழ்ச்சியை 'தினமலர்' தொடர்ந்து நடத்த வேண்டும். நெல் மணியில் அ... ஆ... சொல்லித்தரும் நிகழ்ச்சி அருமையாக இருந்தது. 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

-சந்தியா, விருத்தாசலம்.



சான்றிதழ் 'பொக்கிஷம்'

'தினமலர்' அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்களின் மடியில் குழந்தைகளை அமர வைத்து அவர்களுக்கு எழுத கற்றுக்கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையின் புகைப்படத்துடன் வழங்கப்பட்ட சான்றிதழ் 'பொக்கிஷம்' போன்று பாதுகாத்து வைத்திருப்போம்.

-சுவேதா, ஸ்ரீநெடுஞ்சேரி.



படிக்கும் ஆர்வத்தை துாண்டுகிறது

விஜயதசமி நாளில் குழந்தைகளை கல்வி கற்க வைக்கும் இதுபோன்ற நிகழ்ச்சி மாணவர்கள் சிறு வயதிலேயே படிக்கும் ஆர்வத்தை துண்டும் விதமாக உள்ளது. இப்பகுதியில் வேறு எங்கும் இதுபோன்று நிகழ்ச்சிகள் நடத்தவில்லை. முதன்முறையாக இப்பள்ளியில் நடந்தது மகிழ்ச்சி.

-தீபா, விருத்தாசலம்.

Advertisement