ஹமாஸ் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதிபர் டிரம்ப் புதிய எச்சரிக்கை

வாஷிங்டன்: ஹமாஸ் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் உருவாக்கப்பட்ட அமைதித் திட்டம் இறுதியாக நடைமுறைக்கு வர உள்ள நிலையில், காசா மீதான தொடர்ச்சியான குண்டுவீச்சை இஸ்ரேல் நிறுத்தியது. தற்போது, பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் அமைப்புக்கு அதிபர் டிரம்ப் ஒரு எச்சரிக்கையை விடுத்தார்.
அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
பிணைக்கைதிகள் விடுதலை மற்றும் அமைதி ஒப்பந்தம் முடிவடைய ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக இஸ்ரேல் குண்டுவெடிப்பை தற்காலிகமாக நிறுத்தியதற்கு நான் நன்றி கூறுகிறேன்.
ஹமாஸ் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும். பலர் நினைக்கும் தாமதத்தையோ அல்லது காசா மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தவொரு விளைவையோ நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.
இதை விரைவாகச் செய்வோம். அனைவரும் நியாயமாக நடத்தப்படுவார்கள். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும்
-
அக்., 29 - 31ல் சென்னையில் 'விண்டெர்ஜி இந்தியா' மாநாடு
-
நாடு முழுதும் ஐ.டி.ஐ.,க்களை தரம் உயர்த்தி பயிற்சி தர..ரூ.60,000 கோடி . உடனடி வேலையை உறுதி செய்ய பிரதமர் புது அறிவிப்பு
-
தொழில்மனை வாங்கி உற்பத்தி துவங்காத நிறுவனங்கள் மீது 'சிட்கோ' நடவடிக்கை காரணம் கேட்டு நோட்டீஸ்
-
'லிப்ட்' கதவு இடையே கால் சிக்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு
-
புராவிடன்ட் கிரீன் பார்க் அபார்ட்மென்ட் அணி சாம்பியன்! 'தினமலர் பிரீமியர் லீக்' அபார்ட்மென்ட் கிரிக்கெட்டில் அபார ஆட்டம்
-
நாளைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை