எருதுவிடும் விழா 5 பேர் மீது வழக்கு



கிருஷ்ணகிரி, கந்திகுப்பத்தில் நேற்று முன்தினம் எருதுவிடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை.


இது குறித்து சூலாமலை வி.ஏ.ஓ., வரதராஜ் புகார் படி, கந்திகுப்பம் போலீசார் எருதுவிடும் விழா ஏற்பாட்டாளர்களான கதிரேசன், 60 மற்றும் 4 பேர் உள்பட, 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement