அகவிலைப்படி உயர்வு: அரசு அலுவலர் ஒன்றியம் கடிதம்
சென்னை:'மத்திய அரசை பின்பற்றி, தீபாவளிக்கு முன்பாக, தமிழக அரசு அலுவலர்களுக்கு மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும்' என, தமிழக அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் அமிர்தகுமார் கோரிக்கை விடுத்து உள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:
மத்திய அரசு அலுவலர்களுக்கு மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வை, மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது.
அதுபோல, தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்கள், தொகுப்பூதியம், மதிப்பூதிய பணியாளர்களுக்கு, கடந்த ஜூலை 1 முதல் மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அறிவித்தால், மகிழ்ச்சியாக கொண்டாட உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
18ம் கால்வாய் நீரை போடி வரை திறக்க கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
-
சின்னச்சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
-
பஸ்கள் மோதியதில் கண்ணாடி சேதம்
-
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
-
அமைச்சர் ஆய்வு செய்யவிருந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குண்டு மிரட்டல் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவுக்கும் மிரட்டல்
-
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
Advertisement
Advertisement