வடமாடு மஞ்சுவிரட்டு

மேலுார் : அழகாபுரிபட்டியில் வேட்டை புலி அய்யனார் புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.

இப்போட்டியில் சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்பட பல மாவட்டங்களில் இருந்து காளைகள் கலந்து கொண்டன.

வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கும், காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. காளைகளை அடக்கியதில் ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது.

போட்டியை காண மேலவளவைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement