நெருங்கும் பண்டிகை திருட்டை தடுக்க கோரிக்கை
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வாங்க மந்தாரக்குப்பம் பகுதி மக்கள் கடலுார் மற்றும் விருத்தாசலம் பகுதிக்கு பஸ்களில் அதிகளவில் செல்கின்றனர். இதனால், மந்தாரக்குப்பம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட எந்நேரமும் அதிகளவில் காணப்படுகிறது.
பயணிகளின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ் ஸ்டாண்டில் நகை, பணம் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனால், பயணிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே, போலீசார், பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடை வீதிகளில் போலீசார் பாதுகாபபு பணியில் ஈடுபட வேண்டுமென, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உற்பத்தி துறையின் முன்னோடி தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
ஒடிசாவில் பாஜ பிரமுகர் சுட்டுக்கொலை; பைக்கில் தப்பிய மர்ம நபர்களை தேடும் போலீஸ்
-
அக்டோபர் 12ல் சுற்றுப்பயணம் தொடக்கம்; நிபந்தனைகளுடன் நயினார் பிரசாரத்திற்கு அனுமதி
-
கட்டாக்கில் நீடிக்கும் வன்முறையால் பதற்றம்: இணையதள சேவை முடக்கம் மேலும் நீட்டிப்பு
-
பிரேமலதாவின் தாயார் அம்சவேணி காலமானார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு: ஒரு சவரன் ரூ.89,600!
Advertisement
Advertisement