சைபர் தாக்குதலுக்கு ஆளாகும் பெண்கள் வீடியோக்களை எளிதில் அகற்ற வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு

சென்னை : 'சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள், நேரடியாக தங்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்ற, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெண் வழக்கறிஞர் ஒருவர், தன் கல்லுாரி காலத்தில், ஆண் நண்பருடன் காதல் வயப்பட்டார். அப்போது அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள், புகைப்படங்கள், இணைய தளங்களில் பரப்பப்பட்டிருந்தன. அவற்றை நீக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பெண் வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராஜகோபால் வாசுதேவன் ஆஜராகி, ''பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள், தமிழகத்தில் இன்னும் ஒன்பது இணையதளங்களில் பரவி வருகின்றன,'' என தெரிவித்து, அந்த இணையதளங்களின், 'லிங்க்' விபரங்களை தாக்கல் செய்தார்.
இதற்கு, டி.ஜி.பி., தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, ''மனுதாரர் தரப்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட இணையதளங்களின் 'லிங்க்'கள் முடக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.ரமண மூர்த்தி ஆஜராகி, ''மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள், நேரடியாக தங்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றும் வகையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது,'' என தெரிவித்து, அதன் நகல்களை தாக்கல் செய்தார்.
இதை பதிவு செய்த நீதிபதி, மனுதாரர் தரப்பில் புதிதாக அளிக்கப்பட்ட இணையதளங்களின் 'லிங்க்'குகளை முடக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்., 22ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
மேலும்
-
நீதிமன்றத்தில் நீதிபதியை நோக்கி செருப்பு வீசிய விசாரணை கைதி
-
மாண்டுகன்னீஸ்வரர் கோவில் சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் வலுவிழக்கும் அபாயம்
-
'பெரிடோனியல் டயாலிசிஸ்' சிகிச்சை வீட்டில் சுயமாக செய்து கொள்ளலாம்
-
கடலில் படகு சிறைபிடிப்பு மீனவருக்கு கத்திக்குத்து
-
விதிமீறிய 178 வாகனங்கள் ரூ.30 லட்சம் அபராதம் வசூல்
-
வளர்ப்புப் பிராணிகள் மூலம் உண்ணி காய்ச்சல் பரவ வாய்ப்பு ; ஆடு, மாடு, நாய்களிடம் எச்சரிக்கை தேவை