நம்பியான்வலசையில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் ஆபத்து
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே நம்பியான்வலசையில் கைக்கு எட்டும் தொலைவில் மின் கம்பி செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.
நம்பியான் வலசை பயணியர் நிழற்குடை அருகே உயரழுத்த மின்கம்பி செல்கிறது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக 5 அடி உயரத்திற்கு தாழ்வாகச் செல்லும் மின் கம்பியால் அப்பகுதியில் உள்ள கால்நடைகள், பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து வருகின்றனர். தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள் கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் மீது பட்டால் பேராபத்தாக முடியும். இது குறித்து மின்வாரியத்திடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே திருப்புல்லாணி மின்வாரியத்தினர் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீதிமன்றத்தில் நீதிபதியை நோக்கி செருப்பு வீசிய விசாரணை கைதி
-
மாண்டுகன்னீஸ்வரர் கோவில் சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் வலுவிழக்கும் அபாயம்
-
'பெரிடோனியல் டயாலிசிஸ்' சிகிச்சை வீட்டில் சுயமாக செய்து கொள்ளலாம்
-
கடலில் படகு சிறைபிடிப்பு மீனவருக்கு கத்திக்குத்து
-
விதிமீறிய 178 வாகனங்கள் ரூ.30 லட்சம் அபராதம் வசூல்
-
வளர்ப்புப் பிராணிகள் மூலம் உண்ணி காய்ச்சல் பரவ வாய்ப்பு ; ஆடு, மாடு, நாய்களிடம் எச்சரிக்கை தேவை
Advertisement
Advertisement