ஆந்திராவில் பட்டாசு ஆலையில் தீ: 6 பேர் பரிதாப பலி

விஜயவாடா: ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் ஆம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள பானா சஞ்சா பட்டாசு தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த ஆலை லைசென்ஸ் பெற்று இயங்கி வருகிறது. பட்டாசுகளை தவறாக கையாண்டதால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.இந்த விபத்தில் 6 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரங்கல்
பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'ஆந்திர பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக எனது எண்ணங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' எனக்கூறியுள்ளார்.


மேலும்
-
போதை மாத்திரை விற்பனை கடலுாரில் 2 பேர் கைது
-
சின்னசேலத்தில் 3 கடைகளின் பூட்டு உடைத்து பணம் திருட்டு
-
ரயிலில் பெண் பயணிக்கு தொந்தரவு : வாலிபர் கைது
-
அறிவிக்கப்படாத போக்குவரத்து மாற்றம் சிந்தாதிரிபேட்டையில் பயணியர் தவிப்பு
-
செயல்படாத குடிநீர் மையம் சுற்றுலா பயணியர் தவிப்பு
-
குட்கா கடத்திய புதுச்சேரி ஆசாமிக்கு 'குண்டாஸ்'