பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது; சதித்திட்டம் முறியடிப்பு

சண்டிகர்: தடை செய்யப்பட்ட பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்புடன் தொடர்புடைய இருவரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 2.50 கிலோ எடையுள்ள வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பு, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன் இயங்கி வருகிறது. ஹர்விந்தர் சிங் ரிண்டாவின் வழிகாட்டுதலின் பேரில், பிரிட்டனை மையமாகக் கொண்ட நிஷான் ஜரியன் மற்றும அதேஷ் ஜமாரை ஆகியோரால் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பஞ்சாப்பில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பைச் சேர்ந்த குர்ஜிந்தர் சிங் மற்றும் திவான் சிங் ஆகியோரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2.50 கிலோ எடையுள்ள வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் பஞ்சாப்பில் நிகழ்த்தவிருந்த பெரும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

மேலும்
-
மாணவர்களின் கல்வியை கெடுப்பது ஏன்: அண்ணாமலை கேள்வி
-
பிரிட்டனை சேர்ந்த 9 பல்கலைகள் இந்தியாவில் கல்வி வளாகம் தொடங்கும்: பிரதமர் மோடி அறிவிப்பு
-
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜினாமா: அசாம் பாஜவில் பரபரப்பு
-
வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை: வாக்குறுதிகளை அள்ளி விடுகிறார் தேஜஸ்வி
-
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்
-
மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்; மின் வணிக ஆய்வாளர் கைது