விசைத்தறி தொழிலாளருக்கு போனஸ் 10 சதவீதம் உரிமையாளர் சங்கம் தீர்மானம்

அவிநாசி:விசைத்தறி தொழிலாளருக்கு 10 சதவீதம் போனஸ் வழங்குவது என்று கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், அவிநாசி அடுத்த தெக்கலுார், கொங்கு கலையரங்கில் தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் நடந்தது. செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் குமாரசாமி முன்னிலை வகித்தனர். தொழிலாளருக்கு போனஸ் 10 சதவீதம் கொடுப்பது, தார் ஓட்டும் நபருக்கு தறி ஒன்றுக்கு 300 ரூபாய் கொடுப்பது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

கடந்த ஏப்., 20ம் தேதி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் அறிவிக்கப்பட்ட 10 மற்றும் 15 சதவீதம் முழுமையான கூலியை உறுப்பினர்கள் கேட்டு வாங்கியும், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் தவறாமல் கூலி பில்லை வாங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஒப்பந்த கூலியை வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்களின் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் பெயரை சங்கத்தில் தெரிவிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் ஏராளமான விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement