மேற்காசியாவில் இனி புதிய உதயம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

1

ஜெருசலேம்: இரண்டாண்டு கால பேரழிவு தரும் போரை முடிவுக்கு கொண்டு வர சிறப்பாக பணியாற்றியதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டினார். மேலும் மேற்காசியாவில் புதிய உதயம் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

மகிழ்ச்சி



இஸ்ரேல் பார்லிமென்டில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியதாவது:

இரண்டாண்டுகளாக நடந்து வந்த பேரழிவு தரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நெதன்யாகு சிறப்பாக பணியாற்றினார்.

இந்த அமைதி ஒப்பந்தத்தை சாத்தியமாக்குவதில் நெதன்யாகுவின் பெரிய துணிச்சலும் தேசபக்தியும் உதவியாக இருந்தது. இந்த அமைதி ஒப்பந்தத்தின் வாயிலாக, யூதர்கள், முஸ்லிம்கள் மற்றும் அரபு நாடுகள் உட்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது வரலாறு காணாத நிகழ்வு; மேற்காசியாவின் பொற்காலம். பாலஸ்தீனர்கள் பயங்கரவாதத்தையும், வன்முறையையும் விட்டு நிரந்தரமாக விலக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இஸ்ரேல் பார்லிமென்டில் உரையாற்றிய பின் டிரம்ப், எகிப்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு, எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்சியுடன் இணைந்து தலைமை தாங்கினார். இதில் ஐ.நா., பொதுச் செயலர், 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

@block_B@

டிரம்புக்கு எதிர்ப்பு!

இஸ்ரேல் பார்லிமென்டில் டிரம்ப் பேசிக்கொண்டிருந்த போது, ஹதாஷ் - தால் என்ற இடதுசாரி கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற பதாகையை ஏந்தியதோடு, காசா மீதான இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். பெரும் வரவேற்புக்கு மத்தியில் பேசிக்கொண்டிருந்த டிரம்ப், இதை சற்றும் எதிர்பார்க்காத நிலையில், கூச்சலைக் கண்டு திகைத்தார். உடனடி யாக செயல்பட்ட பார்லி., பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இரு உறுப்பினர்களையும் வெளியேற்றினர். பாதுகாப்பு அதிகாரிகள் மிகவும் திறமையானவர்கள் என புன்னகையுடன் தன் பாராட்டுகளை தெரிவித்தார் டிரம்ப். இதைத்தொடர்ந்து மற்ற பார்லிமென்ட் உறுப்பினர்கள் எழுந்து நின்று டிரம்புக்கு ஆதரவாக 'டிரம்ப், டிரம்ப்' என்று கோஷமிட்டனர். இடையில் ஏற்பட்ட இடையூறுகளுக்காக டிரம்பிடம், நெதன்யாகு வருத்தம் தெரிவித்தார்.block_B

@block_B@

நோபல் பரிசு நிச்சயம்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீண்டும் ஒருமுறை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அமைதிக்கான நோபல் பரிசுக்கான முயற்சிக்கு தன் ஆதரவை மீண்டும் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேலின் மிக உயர்ந்த குடிமகன் விருதிற்கும் பரிந்துரைக்கப்படுவார் என அறிவித்துள்ளார்.block_B

Advertisement