இடுக்கி அணை நீர்மட்டம் உயர்வு

மூணாறு: கேரளாவில் தென்மேற்கு பருவ மழை அக்., 16ல் முடிவுக்கு வந்த பிறகும் மழை தொடர்கிறது. இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு மாவட்டத்தில் மீங்கரா, வாளையாறு, மலம்புழா, போத்துண்டி, சுள்ளியாறு, மங்கலம் ஆகிய அணைகள், இடுக்கி மாவட்டத்தில் ஆனயிறங்கல், குண்டளை, கல்லார்குட்டி, இரட்டையாறு, லோயர் பெரியாறு, கல்லார் ஆகிய அணைகள் ஆகியவற்றில் நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்குவதால் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டது.
நெடுங்கண்டம் அருகே கல்லாறு, கூட்டாறு ஆகிய ஆறுகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கூட்டாறு ஆற்றின் குறுக்கே கருணாபுரம், பாம்பாடும்பாறை ஆகிய ஊராட்சிகளை இணைக்கும் பழமையான பாலம் சேதமடைந்தது.
முல்லைப்பெரியாறு அணையில் 13 ஷட்டர்கள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் பெரியாற்றில் கலந்து இடுக்கி அணையை வந்தடையும். அதனால் இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று மதியம் 1:00 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 434 அடியாக இருந்தது. இதே கால அளவில் கடந்தாண்டு நீர்மட்டம் 372.78 அடியாக இருந்தது.
மேலும்
-
செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று மாலை உபரி நீர் திறப்பு
-
நாடு முழுவதும் தீபாவளி குதுாகலகமாக கொண்டாடப்பட்டது
-
இந்தியா - இஸ்ரேல் இடையே உறவு செழிக்கட்டும்; பிரதமர் நெதன்யாகுவுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
கல்வியில் சிறந்த அல்ல... சீரழிந்த தமிழகம்: அன்புமணி குற்றச்சாட்டு
-
இன்று 8 மாவட்டங்களில் ரெட் அலெர்ட்; அதிக கனமழை பெய்ய வாய்ப்பு!
-
காலம் தந்த நன்கொடை 'தினமலர்' நாளிதழ்