கபடி: பைனலில் இந்திய பெண்கள் * ஆசிய யூத் விளையாட்டில்...

மனாமா: ஆசிய யூத் விளையாட்டு கபடி பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது.
பஹ்ரைனின் மனாமா நகரில் ஆசிய யூத் விளையாட்டு நடக்கிறது. பெண்களுக்கான கபடியில் இந்திய அணி, முதல் மூன்று போட்டியில் வங்கதேசம், இலங்கை, தாய்லாந்தை வீழ்த்தியது. நான்காவது போட்டியில் இந்திய பெண்கள் அணி, ஈரானை எதிர்கொண்டது. இதில் இந்தியா 59-26 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. பட்டியலில் முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறியது. இதில் இன்று, இரண்டாவது இடம் பெற்ற ஈரானை எதிர்கொள்கிறது.
நான்காவது வெற்றி
ஆண்களுக்கான கபடியில் இந்திய அணி தனது நான்காவது போட்டியில் ஈரானை எதிர்கொண்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, 46-29 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நான்கு வெற்றி பெற்ற இந்திய அணி, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்று தனது ஐந்தாவது போட்டியில் தாய்லாந்தை சந்திக்க உள்ளது.
இதுவரை இந்திய அணி ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 3 பதக்கம் வென்று, பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.
மேலும்
-
மழையில் அடித்து செல்லப்பட்ட 3 லட்சம் சவுக்கு நாற்றுகள்
-
மழையால் கோவில் கோபுரம் இடிந்தது
-
கடலுார், மரக்காணம், கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு 4 பெண்கள் பரிதாப பலி
-
வீடூர் அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றம்
-
மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம்: கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்
-
விழுப்புரம் மாவட்டத்தில் 10 செ.மீ., மழை : 10 வீடுகள், மின் கம்பங்கள் சேதம்