கடலுார், மரக்காணம், கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு 4 பெண்கள் பரிதாப பலி

-நமது நிருபர் குழு-
கனமழை காரணமாக, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வீட்டு சுவர் இடிந்து விழுந்து, தாய், மகள் உட்பட 4 பேர் பலியாகினர்.
கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார் முள்ளிப்பள்ளத்தை சேர்ந்தவர் மணி மனைவி அசோதை, 69; இவரது மகள் ஜெயா, 40; விவசாய கூலி தொழிலாளிகள். இருவரும் நேற்று காலை 10.30 மணியளவில் வீட்டிலிருந்தபோது, கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய அசோதை சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ஜெயாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு, புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். புதுச்சத்திரம் போலீசார், விசாரித்தனர். இறந்தவர்கள் குடும்பத்திற்கு அமைச்சர் பன்னீர்செல்வம், நேரில் சென்று, ஆறுதல் கூறினார்.
மரக்காணம் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ஆலத்துார் கிராமத்தை சேர்ந்த அர்ச்சுணன் மனைவி பச்சையம்மாள், 68; வீட்டில் தூங்கியபோது, கனமழை காரணமாக ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையத்தை சேர்ந்த கலியபெருமாள் மனைவி வனமயில், 72; இவரது கணவர் இறந்த நிலையில், கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழையால், நேற்று காலை 6.30 மணியளவில் கூரை வீடு இடிந்து விழுந்தது.
வனமயில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும்
-
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது; வானிலை மையம் அறிவிப்பு
-
தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; சவரனுக்கு ரூ.320 குறைவு
-
அமெரிக்கா தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: வர்த்தகப் போருக்கு மத்தியில் சீனா புதிய எச்சரிக்கை
-
மலேசியாவில் ஆசியான் மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடு
-
சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்
-
டில்லி என்கவுன்டரில் குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை