சேவை செய்வதில் மக்கள் நம்பிக்கையை ஆர்.எஸ்.எஸ்., பெற்றுள்ளது: வாசன்
சென்னை: 'சமூக மாற்றத்திற்காக பாடுபடும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.,' என, த.மா.கா., தலைவர் வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவையொட்டி, அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியதாவது:
சமூக மாற்றத்திற்காக பாடுபடும் உலகின் மிகப்பெரிய தன்னார்வ இயக்கம் ஆர்.எஸ்.எஸ்., ஹிந்துக்களை ஒன்றிணைத்து, மற்றவர்களுக்காகவும் சேவை செய்வதில், மக்கள் நம்பிக்கையை பெற்ற இயக்கம்.
கருத்து வேறுபாடுகளை தீர்க்க; இயற்கையோடு இணக்கமாக வாழ; விளிம்பு நிலை மக்களுக்கு சேவை செய்ய உதவிக்கரம் நீட்டுகிறது.
ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதால், சமூக, சமத்துவம் நிலவும் என ஆர்.எஸ்.எஸ்., நம்புகிறது. 'இந்திய தேசிய கொடியை மதிப்போம். வெளிப்படையாக செயல்படுவோம். அமைதி வழிமுறைகளில் ஈடுபடுவோம். அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி நிற்போம்' என்கிறது, ஆர்.எஸ்.எஸ்.,
இந்தியாவில் ஏழைகளுக்கு சேவை செய்ய பல அமைப்புகளை, ஆர்.எஸ்.எஸ்., உருவாக்கியுள்ளது.
அவற்றில், கணிசமான எண்ணிக்கையில் பெண்கள் இருப்பதும், முக்கியமான பதவிகளில் இருப்பதும் பொருத்தமான ஒன்று. பழங்குடியினரின் நலனுக்காகவும், 'ஏகல் வித்யாலயா' வாயிலாக, சிறப்பான கல்வி பணியிலும் ஈடுபடுகிறது.
உடற்பயிற்சி, விளையாட்டு, ஆன்மிகம், அறிவுசார் சொற்பொழிவு ஆகியவை வாயிலாக தன்னார்வலர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி அளிக்கிறது.
நெருக்கடி மற்றும் இயற்கை பேரிடர்களின்போது, மறுவாழ்வு பணிகளில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ்., பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பதவி சுகத்திற்காக பேசும் இந்த பேச்சை உங்கள் தந்தை ஆன்மா நிச்சயமாக மன்னிக்காது உங்களை
நீ என்ன சொன்னாலும் உனக்கு அலுமினிய தட்டு தான் முருகா
RSS = Relentless Social Service.
தளராத, இடைவிடாத சமூக சேவை.
சரியாக கூறியுள்ளார்.
இதயம் பத்திரம் ஓவியம்
ஒரு ராஜ்ஜியசபை சீட்டுக்காக சோரம்போனவன்....
உனக்கெல்லாம் ஒரு முழம் கயிறு கிடைக்கலையா ஜால்றா வாசா ...
நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணே! எல்லோருக்குமே இது ஏற்கெனவே நன்றாகவே தெரியும். அரசியலை பணம் சம்பாதிக்கும் ஒரு கருவியாக, இயந்திரமாக இல்லாமல் நாட்டின் நலன்தான் முக்கியம் என எண்ணும் அரசியல் தலைவர்களில் தலையானவர் நீங்கள் !
செல்வப் பெருந்ததை போன்ற பல கட்சிகள் மாறி வந்தவர்கள் இன்றைய காங்கிரசின் தலைவராக இருக்கும் போது காங்கிரஸ் என்ற போர்வை உங்களுக்கு தேவையே இல்லை!
முதலில் காங்கிரஸ் என்ற போர்வையில் இருந்து வெளியே வாருங்கள்!
உண்மையை பேசி உள்ளார்.
நல்ல தகவலுக்கும் நல்ல சொல்லுக்கும் நன்றிகள்
நேர்மையான அரசியல் தலைவர் திரு. வாசன் அவர்கள்.
பிறகட்சிகள் ஆர்.எஸ்.எஸ் மாதிரி மக்கள் சேவைகளை குறிக்கோளாகக் கொண்டவே அல்ல. நிஷ்காம்ய கர்மாவை அவர்களிடமிருந்தே கற்க வேண்டும். ஒரு ஆர்எஸ்எஸ் காரணாக இருப்பது அவ்வளவு எளிதல்ல.மேலும்
-
பாலிவுட் காமெடி நடிகர் சதீஷ் ஷா மரணம்
-
இரட்டை இன்ஜின் அரசின் வெற்று வாக்குறுதிகள்: ராகுல் குற்றச்சாட்டு
-
குடும்ப அரசியல் செய்யும் இரண்டு கட்சிகள்; தேஜஸ்வி, ராகுலை மேற்கோள் காட்டி விளாசிய அமித்ஷா
-
இந்தியாவிற்கு எதிரான போரில் பாகிஸ்தானால் வெற்றி பெற முடியாது: அமெரிக்க முன்னாள் உளவுத்துறை அதிகாரி எச்சரிக்கை
-
இந்தியா அசத்தல் வெற்றி * சதம் விளாசினார் ரோகித்
-
ரோகித் சர்மா அதிரடி சதம்: இந்தியா ஆறுதல் வெற்றி