மூத்த குடிமக்களை பாதுகாக்க ஆணையம் அமைக்க கோரிக்கை
சென்னை: ''தமிழகத்தில், 1.25 கோடி பேர் மூத்த குடிமக்களாக உள்ளதால், அவர்கள் நலன் காக்க, கேரளாவை போல் தமிழகத்திலும் ஆணையம் அமைக்க வேண்டும்'' என, தமிழக மூத்த குடிமக்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ராமராவ் கூறினார்.
தமிழக மூத்த குடிமக்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் ஹெல்ப் ஏஜ் இந்தியா இணைந்து, மூத்த குடிமக்கள் ஆணையம் அமைப்பது தொடர்பாக, நேற்று அண்ணா நுாலகத்தில் கருத்தரங்கம் நடத்தின. இதில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த, 18 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இது குறித்து, தமிழக மூத்த குடிமக்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ராமராவ் கூறியதாவது:
தமிழகத்தில், 8 கோடி பேரில், 1.25 கோடி பேர் மூத்த குடிமக்கள். இது, வரும் 2031ல், 1.42 கோடியாக உயரும். பலர், குடும்பத்தில் இருந்து புறக்கணிப்பு, அவதுாறு, சுரண்டல் போன்றவற்றால், கடைசி காலங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இவர்களின் நலன் காக்க, தமிழக அரசு, 'மூத்த குடிமக்களுக்கான மாநில கொள்கை - 2023' வெளியிட்டது. இந்த கொள்கையை செயலாக்கத்திற்கு கொண்டுவர ஆணையம் தேவை.
கேரளாவில் இருப்பது போல், தமிழகத்தில் மூத்த குடிமக்கள் ஆணையம் அமைக்க வலியுறுத்தி, இந்த கருத்தரங்கில் விவாதித்து, தமிழக அரசுக்கு வரைவு அறிக்கை அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஆந்திராவில் சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி
-
செங்கோட்டையன் வன்மம் வெளிப்பட்டு விட்டது: இபிஎஸ் காட்டம்
-
என்னை நீக்கியது வேதனை அளிக்கிறது; இபிஎஸ் செயல் சர்வாதிகாரப்போக்கு என செங்கோட்டையன் பேட்டி
-
சவுதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக்கொலை; உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை
-
குடும்பத்துக்காக இல்லை; மக்களுக்காக உழைத்தேன்: இன்னும் ஒரு வாய்ப்பு கேட்கிறார் நிதிஷ் குமார்
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு: ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை