வட மாநில பெண் தொழிலாளி பலி
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வடமாநில கூலி தொழிலாளி பெண் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒடிசா மாநிலம், மயூர் மாவட்டம், கந்து மண்டியை சேர்ந்தவர் திப்புசிங் மனைவி சிமாசிங், 20; இவர் கடந்த 2 மாதங்களாக விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டை பகுதியில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் திடீரென வலிப்பு ஏற்பட்டு, மயக்கமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
தகவலறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன படுகொலை நடக்கவில்லை அமெரிக்க மிரட்டலுக்கு பதிலடி
-
செமஸ்டர் முடிவு வெளியான 15 நாட்களுக்குள் துணை தேர்வு
-
அரசு விரைவு பஸ்களில் பொங்கல் முன்பதிவு துவக்கம்
-
பயங்கரவாதி என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் எழுத தெரியுமா? தேஜஸ்விக்கு அசாதுதீன் ஓவைசி கேள்வி
-
கோவை மாணவி பாலியல் குற்றவாளிகள் மூவரை சுட்டுபிடித்த காவல்துறை
-
கேளுங்கள்...
Advertisement
Advertisement