அரசு விரைவு பஸ்களில் பொங்கல் முன்பதிவு துவக்கம்
   சென்னை:  அரசு விரைவு பஸ்களில், பொங்கல் டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது. 
இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
 அரசு விரைவு பஸ்களில், 90 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கான முன்பதிவு துவங்கி உள்ளது. 
 கடந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் வாயிலாக, ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். வரும் 2026 ஜன., 14ல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 
 சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு செல்வர். அவர்கள் இப்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம். 
 விரைவு பஸ்களில் முன்பதிவு அதிகம் இருந்தால், சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சிறப்பு பஸ்கள் அறிவிப்பு,  ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும். 
 அரசு போக்குவரத்துக் கழகத்தின், www.tnstc.in என்ற இணையதளம் அல்லது அதன் செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.  இவ்வாறு அவர்கள் கூறினர். 
மேலும்
-     
        
 இது நடந்தால் நியூயார்க் நகரத்திற்கு நிதியை நிறுத்துவேன்: அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல்
 -     
        
 அ.தி.மு.க., அலுவலகத்தில் பேனர் அகற்றியதால் பரபரப்பு
 -     
        
 குறிவைத்து அடிக்கும் பா.ஜ.,வுக்கு முதல் பலி நான்
 -     
        
 அ.தி.மு.க.,விலும் குடும்ப அரசியல் செங்கோட்டையன் பகிரங்க புகார்
 -     
        
 கொடி கம்பங்கள் அகற்றும் உத்தரவு; சுப்ரீம் கோர்ட்டில் இ.கம்யூ., வழக்கு
 -     
        
 குடியுரிமை பறிபோகும் அபாயம்