கோவை மாணவி பாலியல் குற்றவாளிகள் மூவரை சுட்டுப்பிடித்த போலீசார்!
 கோவை: கோவையில் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த கல்லுாரி மாணவியை, கத்தி முனையில் கடத்தி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூவரை கோவை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
இது குறித்த விபரம் வருமாறு:
மதுரையைச் சேர்ந்த 20 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது ஆண் நண்பர், கோவை ஒண்டிபுதுாரைச் சேர்ந்த 25 வயது இளைஞர்; மெக்கானிக் மற்றும் பைக் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
கண்ணாடி உடைப்பு
 நேற்று முன்தினம் (நவ.,02)  இரவு 11:00 மணிக்கு இருவரும் காரில் கோவை விமான நிலையத்தின் பின்புறம் பிருந்தாவன் நகர் பகுதிக்கு சென்று, அப்பகுதியில் உள்ள காலி மைதானத்தில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு போதையில் வந்த மூவர், கார் கதவை தட்டி, இருவரையும் வெளியே வருமாறு அழைத்தனர். அச்சமடைந்த இருவரும், வெளியே வர மறுத்தனர். இதையடுத்து, மூவரில் ஒருவர் காரின் முன்பக்க கண்ணாடியை அரிவாளால் அடித்து உடைத்து உள்ளார்.
தொடர்ந்து, காரின் கதவு கண்ணாடியை உடைத்தனர். பின், காரில் இருந்த இளைஞரை கடுமையாக தாக்கி, அரிவாளால் வெட்டினர். அதில், அவருக்கு தலை மற்றும் காதின் அருகே காயம் ஏற்பட்டதை அடுத்து, மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, மூன்று மர்ம நபர்களும் மாணவியை ஒன்றரை கி.மீ., துாரம் இழுத்துச் சென்று, மறைவான இடத்தில் வைத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அடுத்தடுத்து மூவரும் பலாத்காரம் செய்ததால், தாக்குப்பிடிக்க முடியாமல் மாணவி மயங்கினார். நள்ளிரவில் அவரை அப்படியே விட்டு, மூவரும் அங்கிருந்து தப்பினர்.
நினைவு திரும்பியது
 மயக்கமடைந்த வாலிபருக்கு அதிகாலை 3:00 மணிக்கு நினைவு திரும்பியது. அவர், காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து நடந்த விபரத்தை தெரிவித்தார். உடனடியாக பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வாலிபர் அளித்த தகவலில், மாணவியை அப் பகுதி முழுதும் போலீசார் தேடினர். இரண்டு மணி நேர தேடலுக்கு பின், கார் நின்றிருந்த இடத்தில் இருந்து ஒன்றரை கி.மீ.,க்கு அப்பால், மாணவி ஆடையின்றி மயங்கிய நிலையில் கிடந்தார்.
தனிப்படைகள் அமைப்பு
 அவரை மீட்ட போலீசார், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.
இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க, கோவை மாநகர போலீஸ் வடக்கு துணை கமிஷனர் தேவநாதன் தலைமையில், ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
நள்ளிரவில் மாணவியின் கதறல்
காரில் இருந்த இளைஞரை அரிவாளால் வெட்டியதால் அவர் மயக்கமடைந்தார். அதன்பின் மாணவியை மர்ம நபர்கள் இழுத்து சென்றுள்ளனர். அப்போது மாணவி, 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என, கதறி சத்தமிட்டுள்ளார்.
மாணவியின் கதறல், அருகில் உள்ள சிலருக்கு கேட்டுள்ளது; அவர்கள் சென்று பார்த்த போது, இருட்டில் அங்கு யாரும் இல்லை. அதற்குள் மூவரும் மாணவியை மறைவான இடத்துக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.
குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு
இந்நிலையில்  கோவை போலீசார் குற்றவாளிகளை தேடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது அவ்வழியாக வந்த  கோவை மாணவி பாலியல் குற்றவாளிகள் குணா தவசி, சதீஷ் கருப்பசாமி, கார்த்திக் காளீஸ்வரன் ஆகியோர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றனர். சுதாரித்த போலீசார் குற்றவாளிகள் மூவரையும் காலில் சுட்டுப்பிடித்தனர். காயம் அடைந்துள்ள மூவருக்கும், கோவை அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  இதில் அந்த நபர்கள்தான் சம்பந்தபட்டுள்ளார்கள் என்று எப்படி முடிவு செய்தார்கள். வாகன தணிக்கையின்போது தப்பி ஓட முயற்சித்தார்கள் என்கிறார்கள். லைசென்ஸ் இல்லாதவன், போதையில் உள்ளவன், தடை செய்யப்பட்ட பொருள் வைத்திருப்பவன், பைக் திருடன் போன்றவர்களும் தப்பி ஒட முயற்சிப்பர். என்னவோ இந்த நிகழ்வின் சூட்டை தணிக்க இப்படி ஒரு நாடகம் நிகழ்த்தப்பட்டது போல் தோன்றுகிறது. அவர்கள்தான் என்பதற்கு எந்தவித நிரூபணமும் இதில் தெரியவில்லை
  சுட்டது தான் சுட்டாங்க....வெண்ணிற ஆடை மூர்த்தி ஒரு படத்தில் சொல்வது போல் ... அங்கேயே சுட்டிருந்தா தேவலைன்னு மக்கள் சொல்றாங்க.
  ஒரே நாளில் பிடித்து அரசியல் செய்வதை நிறுத்திட்டாங்களே என்ற கவலை. பாவம்.
  சட்டம் ஒழுங்கு, கல்வி, மருத்துவம், பெண்கள் பாதுகாப்பு அனைத்திலும் தமிழ் நாடு இந்தியாவுக்கே ஏன் உலகத்துக்கே முன் மாதிரியாக திகழ்கிறது.
  பெண் பாவம் நாட்டையே சீர் குலைக்கும் ....
  இன்னும் நமது சமுதாயம் முழுமையான முதிர்ச்சியான ஒன்றாக மாறவில்லையாம் . அதுவரை நட்பும் காதலும் கவனமுடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று விடியலுக்கு முட்டு .... முதிர்ச்சியான சமுதாயம் இல்லை என்பதால்தான் விடியல் மூலைக்கு மூலை டாஸ்மாக் கள்ள சாராயம் திறந்து மக்களுக்கு அதை சலுகை விலையில் விக்குது ...அதனுடன் கஞ்சா போதை மாத்திரை சாராயம் மெத்து என்று தெருவெங்கும் விற்றால் சமுதாயம் மேலும் முதிச்சி அடையும் ....இதனுடன் ஹாப்பி ஸ்ட்ரீட் என்று பெண்களை மேலும் மேலும் நடு ரோட்டில் ஆட விட்டால் இதற்கும் மேல் கேவல சம்பவங்கள் நாட்டில் நடக்கும் ..
  இன்னமும் கருத்து எழுதுபவர்கள் ஆணாதிக்க மனப்பான்மையில் தான் எழுதுகின்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஏன் பேசிக் கொண்டிருந்தார்கள்?? என்று மணியான கருத்து சொல்கிறார்கள், சே இது சுதந்திர நாடு , எங்கே இஷ்டமோ அங்கே போய் பேசுகிறார்கள். இதை தப்புன்னு சொலறவங்க எல்லாம் காந்தி சொன்ன கருத்தான "" என்றைக்கு ஒரு இளமபெண் உடலில் நகைகளை அணிந்து நடு இரவு 12 மணிக்கு தனியாக சென்று இடையூறின்றி வீடு திரும்புகின்றாரோ, அன்று தான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது"" என்று சொன்னதை மறந்து மறுத்து எதிர்ப்பதாகதான் அர்த்தம். ஆண் மட்டும் எப்ப வேணா பிரச்னையின்றி நடமாடலாம். பெண் தன் விருப்பப்படி வெளியில் போகக்கூடாது என்று சொல்பவர்கள், மனதில் களங்கமும், வெளியில் கோழைத்தனமும் உள்ள இரக்கமற்றவர்கள். கோவையில் நடந்தது போல பாலியல் பலாத்காரம் செய்யும் ஈனப்பிறவிகள், இந்த சுதந்திர நாட்டில் வாழத்குதியற்றவர்கள். அவர்களை மட்டும் தண்டித்தால் போதாது. அவர்களை தவறாக வளர்த்த பெற்றோரையும் சேர்த்து தண்டிக்கும் வகையில் அவர்கள் அனைவருடைய அடையாள ஆவணங்களையும், வோட்டுரிமையையும் தண்டனை காலத்தில் இடைநீக்கம் செய்வது பயத்தை தரும். செய்வார்களா?
இதே போல் நடுத்தெருவில் ஒரு நபரை இரக்கமின்றி வெட்டி கொலை செய்துவிட்டு பெரிய ""...." போல போலீஸில் சரணடையும் நபர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் அடையாள ஆவணங்களையும் ஓட்டுரிமையையும் இடைநீக்கம் செய்தால் ஓரளவு பயம் வரலாம். நீதியரசர்கள் தயவு செய்து இந்த வகையில் சிந்திக்க வேண்டும்.
திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் பொழுது நிச்சயமாக காந்தி சொன்னது நடக்காது விரைவில் உத்தரப்பிரதேசத்தில் வேண்டுமானால் நடக்கலாம்
நீங்க சொல்றது எல்லாம் திருத்தமாக, நல்லாத்தான் இருக்கு, இருந்தாலும் தவறான இடத்தில் தவறான நேரத்தில் இருந்தால் என்ன தவறான நிலை வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டியதும் முக்கியமல்லவா? கருத்தில் ஆணாதிக்கமில்லாமல் ஆதங்கமும் இருக்கலாமல்லவா? ஐயோ, எதுக்கு இப்படி நேரம் கெட்ட நேரத்தில என்று கோபத்துடன் கேட்பது தவறல்லவே?
  எப்படியாவது தண்டனையிலுருந்து தப்பிவிடலாம் என்கிற தைரியம் தான் இப்படி படு பாதக செயல்களில் குற்றவாளிகளை ஈடுபடவைக்கிறது . இதற்க்கு காரணம் நமது நீதித்துறையும் அரசாங்கமும். ஒரு சில வழக்குகளே குற்றத்தை நிரூபித்து தண்டனை அளிக்கப்படுகிறது , பெரும்பாலான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படாமல் குற்றவாளிகள் வழக்குளிருந்து விடுவிக்கப்படுகிறார் . இதற்க்கு பொறுப்போ யார் ? அரசாங்கமா அல்லது நீதித்துறையா ?
  1/2 பக்க விளம்பரம் போல் இருக்கிறது. நல்ல காலம் விமனநிலயத்திற்கு அருகில் இருந்ததால் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு தப்பி சென்றிருக்கலாம் என எண்ணி தனி படை மும்பை, பெங்களூரு, ஹைதெராபாத் , டெல்லி கல்கத்தா நேபாள் போன்ற இடவ்ங்களுக்கும் சென்று தேடியதாக போட்டிருந்தால் விளம்பரம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
  வேண்டும் என்றே இரவு 11 மணிக்கு சென்றார் அந்த பெண் என்று கட்டு கதை பரப்பி விடுகிறார்கள். இதனால் மக்கள் அந்த பெண்ணின் நடத்தையை சந்தேகித்து , அவளுக்கு இது வேண்டும் என்று வாய்மை தோற்கடிக்க படும்.மேலும்
-     
        
 இது நடந்தால் நியூயார்க் நகரத்திற்கு நிதியை நிறுத்துவேன்: அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல்
 -     
        
 அ.தி.மு.க., அலுவலகத்தில் பேனர் அகற்றியதால் பரபரப்பு
 -     
        
 குறிவைத்து அடிக்கும் பா.ஜ.,வுக்கு முதல் பலி நான்
 -     
        
 அ.தி.மு.க.,விலும் குடும்ப அரசியல் செங்கோட்டையன் பகிரங்க புகார்
 -     
        
 கொடி கம்பங்கள் அகற்றும் உத்தரவு; சுப்ரீம் கோர்ட்டில் இ.கம்யூ., வழக்கு
 -     
        
 குடியுரிமை பறிபோகும் அபாயம்