குறிவைத்து அடிக்கும் பா.ஜ.,வுக்கு முதல் பலி நான்
   ஓட்டுகள் அதிக சதவீதம் இருந்தால் தான், எதிரிகளோடு தெம்பாக மோத முடியும். அதற்காகத்தான், வாக்காளர் திருத்தப் பணியில், முறையாக அனைத்து ஓட்டுகளையும் சேர்க்க வேண்டும் என்கிறோம். 
 அப்படி செய்தாலே, தி.மு.க.,வுக்கு பாதி வெற்றி கிடைத்து விடும். 
 தி.மு.க., கூட்டணியில் இருப்போர், விரைவில் வெளியே வருவர் என பழனிசாமி பகல் கனவு கண்டு பேசி வந்தார். ஆனால், எதுவுமே நடக்கவில்லை. 
 ஆனால், அவரோடு கூட்டணியாக இருந்த பா.ம.க., இரண்டாகி விட்டது. தே.மு.தி.க., வெளியே வந்துவிட்டது. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் போன்றோர் கட்சியில் இருந்தே ஓரங்கட்டப்பட்டு விட்டனர். இதனால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தோற்பது உறுதி. இதை அறிந்துதான், தி.மு.க.,வை நோக்கி குறி வைத்து அடிக்கிறது பா.ஜ., அதற்கு முதல் பலி நான். அதற்கெல்லாம் பயப்படுபவன் அல்ல, இந்த நேரு. 
 - கே.என்.நேரு 
 தமிழக அமைச்சர், தி.மு.க., 
  இப்படி தீயசக்தியின் பணமூட்டை கோடௌன்களை செந்தில், நேரு, வேலு முடக்கின்னால் எங்கள் மக்கள் எப்படி காசு வாங்கி வோட்டை போட்டு விடியல் ஆட்சியை மீண்டும் மலர வைக்க முடியும் ? செல்லாது செல்லாது இந்த ஆட்டம் செல்லாது.
  குறி வைத்து அடிக்கிறது பா.ஜ., என்றால் சரியாகத்தான் பொறி வைத்து பிடித்திருக்கிறார்கள் என்று ஒத்துக்கொள்கிறார். இவர் முதல் ஆள் என்றல் இன்னும் வரிசையாக பிடிபடுவார்கள் என்று சொல்கிறாரோ? ஆனால் ஊழல் செய்வதில் தி மு கவினர் முது நிலை பட்டமே பெற்றவர்கள். அமலாக்க துறை எத்தனையோ அரசியல், ஊழல் வாதிகளிடம் தரவுகளை கைப்பற்றியதாக சொன்னாலும், இதுவரை பெரிதாக யாருக்கும் தண்டனை வாங்கி கொடுத்ததாக தெரியவில்லை என்று மக்கள் கவலை கொள்கிறார்கள்.
  உத்தமர் சொல்லுகிறார் கேளுங்கள். ஊரை கொள்ளையடித்தவர்கள் பேசுகிறார்கள். இதுதான் திராவிட மாடல்
  அனைத்து ஓட்டுகளையும் சேர்க்க வேண்டும் என்கிறோம். அதாவது பாகிஸ்தான், பர்மா, வங்கதேசம் இப்படி பல நாடுகளிலிருந்து முறையாக வராமல், திருட்டுத்தனமாக வந்துள்ள அந்த அமைதி மார்க்கத்தினரை சேர்க்க வேண்டும் என்கிறார்கள் இந்த திருட்டு திமுக மற்றும் படா திருட்டு காங்கிரஸ் காரர்கள். அவர்கள் வோட்டுக்கள்தான் இவர்களுக்கு அதிகமாக கிடைக்கிறது.மேலும்
-     
        
 இது நடந்தால் நியூயார்க் நகரத்திற்கு நிதியை நிறுத்துவேன்: அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல்
 -     
        
 அ.தி.மு.க., அலுவலகத்தில் பேனர் அகற்றியதால் பரபரப்பு
 -     
        
 அ.தி.மு.க.,விலும் குடும்ப அரசியல் செங்கோட்டையன் பகிரங்க புகார்
 -     
        
 கொடி கம்பங்கள் அகற்றும் உத்தரவு; சுப்ரீம் கோர்ட்டில் இ.கம்யூ., வழக்கு
 -     
        
 குடியுரிமை பறிபோகும் அபாயம்
 -     
        
 முதல்வர் துயில் களைவது எப்போது?