முதல்வர் துயில் களைவது எப்போது?
சென்னை: 'பெண்களுக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து துன்பம் நேரிடுகிறது. முதல்வர் ஸ்டாலின் துயில் களைவது எப்போது' என, த.வெ.க., தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில், தாங்க முடியாத கூட்டு பாலியல் கொடுமை நடந்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எங்கே; பெண்களுக்கும், பொது மக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது? கோவை மாணவிக்கு கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து, சட்டப்படி தண்டிக்க வேண்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (2)
திகழ் ஓவியன் - ,
04 நவ,2025 - 18:36 Report Abuse
முதல்வர் துயில் களைவது...பிப்ரவரி 31... 0
0
Reply
angbu ganesh - chennai,இந்தியா
04 நவ,2025 - 09:51 Report Abuse
யாரோ எழுதி கொடுக்கறது படிக்கறதுக்கு உங்களுக்கெதுக்கு வோட்டு 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement