மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியம்: எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா
  சென்னை: அதிமுக ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். அவர் இன்று (நவ., 04)  மாலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார்..
இந்த சூழலில் இன்று (நவ., 04) திமுக தலைமை அலுவலகமான அண்னா அறிவாலயத்திற்கு மனோஜ் பாண்டியன் வருகை தந்தார். அவர் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர் துரைமுருகனும் உடன் இருந்தார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை நடத்தி வரும் ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலாவுடன் இணைந்து அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சூழலில் அவரது நெருங்கிய கட்சி நிர்வாகி மனோஜ் பாண்டியன் தற்போது திமுகவில் இணைந்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மனோஜ் பாண்டியன் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
@block_P@
திமுகவில் இணைந்த பின் மனோஜ் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் என்னை திமுகவில் இணைத்து கொண்டேன். காரணம் இன்று திராவிட கொள்கைகளை முழுமையாக பாதுகாக்கும் தலைவராகவும், தமிழக உரிமைக்காக போராடும் தலைவராகவும், தமிழகத்தின் உரிமைகளையும் எங்கேயும் அடகு வைக்காத தலைவராகவும் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். 
நான் சிந்தித்து எடுத்த ஒரு தீர்க்கமான முடிவு தான் இந்த முடிவு. 
எஞ்சிய வாழ்க்கையில் திராவிடக் கொள்கையை பாதுகாக்க திமுகவில் இணைந்தேன். இன்று மாலை 4 மணிக்கு எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து கொள்வேன். இன்றைய அதிமுக என்பது வேறு ஒரு இயக்கத்தை நம்பி, அந்த இயக்கத்தின் சொல்படி செயல்படுகிறது. 
பாஜவின் கிளைக்கழகமாக அதிமுக உள்ளது. எந்த கொள்கைக்காக அதிமுக உருவானதோ அது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. தொண்டர்களின் உழைப்பை அங்கீகரிக்காதவர் இபிஎஸ். இவ்வாறு மனோஜ் பாண்டியன் கூறினார்.block_P
@quote@
@block_B@ராஜினாமாblock_B
இதனைத் தொடர்ந்து இன்று மாலை  சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கொடுத்தார்.quote
  அடுத்த பச்சோந்தி
  நன்றி எட்ட ஜென்மங்கள்
  கொஞ்ச நாளில் அண்ணாமலையும் திமுகவுக்கு வந்து விடுவார்
  எம்எல்ஏ பதவியை தூக்கி எறிந்தார் மனோஜ் பாண்டியன்.. பாஜகவின் கிளை கழகம் அதிமுக என்று குற்றச்சாட்டு
  திராவிட கொள்கைகளை முழுமையாக பாதுகாக்கும் தலைவராகவும், தமிழக உரிமைக்காக போராடும் தலைவராகவும், தமிழகத்தின் உரிமைகளையும் எங்கேயும் அடகு வைக்காத தலைவராகவும் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். மிக மிக உண்மை ..
  திராவிட சிந்தனை உள்ள அதிமுக வினர் திமுகவிலும் தேசிய ஆன்மீக சிந்தனை கொண்ட திமுகவினர் அதிமுகவில் ஐக்கியமாகி விடலாம்
  நல்ல செய்தி ....இதெல்லாம் எப்படி இந்த பத்திரிகையில் வருது ..
மானம் ரோசம் கிடையாது
  கருணா முன்னோர் செய்த கோவில் திருப்பணியின் பலம் ஸ்டாலினுடன் நிறைவு பெறும்.
நிச்சயமாக.
  அடுத்து வைத்தியா.. பண்ணீரா!!!???
  திமுக அரசை எதிர்த்து நிறைய வழக்குகளை போட்டு ஆஜராகியிருக்கிறார். இப்போ அந்த வாதங்கள் எல்லாம் வாபஸ்.மேலும்
-     
        
 கடும் சட்டங்கள் இருந்தால் தான் பாலியல் சம்பவங்களை தடுக்க முடியும்; அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
 -     
        
 இந்துஜா குழும தலைவர் கோபிசந்த் இந்துஜா காலமானார்
 -     
        
 பாக். சுப்ரீம்கோர்ட் உணவகத்தில் வெடித்த கேஸ் சிலிண்டர்: ஏசி இயந்திரம் பழுது பார்த்தபோது விபரீதம்
 -     
        
 வளர்ச்சியடைந்த பீஹாராக என்டிஏ, வால் மாற்ற முடியும்: சொல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
 -     
        
 வாரிசு அரசியலை விமர்சித்து சசி தரூர் எழுதிய கட்டுரை: காங்., கோபம்
 -     
        
 சேலத்தில் பாமகவினர் பயங்கர மோதல்