தென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; மீண்டும் ரிஷப் பன்ட்!
மும்பை: தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி கடைசியாக வெஸ்ட் இண்டீக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்திய அணி அசத்தியது. அடுத்தாக, இந்திய அணிக்கு எதிராக தென்னாப்ரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் வரும் நவ.,14ம் தேதியும், 2வது டெஸ்ட் போட்டி நவ.,22ம் தேதி நடக்கின்றன.
இந்த நிலையில், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இதில், காயத்தினால் விலகியிருந்த ரிஷப் பன்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கில் தலைமையிலான முழு அணியின் விபரம் பின்வருமாறு;
கில் (கேப்டன்)
ரிஷப் பன்ட் (துணை கேப்டன்)
ஜெய்ஸ்வால்
கேஎல் ராகுல்
சாய் சுதர்சன்
தேவ்தட் படிக்கல்
துருவ் ஜூரேல்
ரவீந்திர ஜடேஜா
வாஷிங்டன் சுந்தர்
பும்ரா
அக்ஷர் படேல்
நிதிஷ்குமார் ரெட்டி
முகமது சிராஜ்
குல்தீப் யாதவ்
ஆகாஷ் தீப், ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அதேபோல, தென்னாப்ரிக்கா ஏ அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திலக் வர்மா தலைமையிலான அணியின் முழு விபரம்;
திலக் வர்மா (கேப்டன்)
ருதுராஜ் கெயிக்வாட் (துணை கேப்டன்)
அபிஷேக் ஷர்மா
ரியான் பராக்
இஷான் கிஷான்
ஆயுஷ் பதோனி
நிஷாந்த் சிந்து
விப்ராஜ் நிகம்
மனவ் சுதர்
ஹர்ஷித் ரானா
அர்ஷ்தீப் சிங்
பிரசித் கிருஷ்ணா
கலீல் அகமது
பிரப்சிம்ரன் சிங், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வாழ்த்துக்கள். கொஞ்சம் ஹெட் வெயிட்டை இறக்கிவைத்துவிட்டு ஆடவும். கண்டிப்பாக தொடரை நீங்கள் வெல்வீர்கள். All the best.
முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14-18.
இரண்டாம் டெஸ்ட் போட்டி நவம்பர் 22-26.
வெற்றிபெற வாழ்த்துக்கள்.மேலும்
-
தர்மத்தின் குரல் என்றும் ஒலிக்கட்டும்!
-
வெற்றி தொடருமா? ஆஸி.,க்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்தியா பேட்டிங்
-
மாணவர்களின் அறிவுக்கண்ணை திறக்கும் ஒளிவிளக்கு 'தினமலர்'
-
ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கு: நவ.14ல் ஆஜராக அனில் அம்பானிக்கு ஈ.டி., நோட்டீஸ்
-
தன்னை முன்னிலைப்படுத்தி நிற்கிறது 'தினமலர்' நாளிதழ்
-
ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ஆர்ஜேடி, காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு