எஸ்.பி.பட்டினம் பஸ்சில் எல்.இ.டி. பெயர்ப்பலகை
காரைக்குடி: காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து எஸ்.பி.பட்டினத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ்சில் ஊர் பெயர் பலகை இல்லாமல், பயணிகள் சிரமம் அடைவது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து எல்.இ.டி., பெயர் பலகை பொருத்தப் பட்டுள்ளது.
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, காலை 8:30 மணிக்கு தேவகோட்டை, வழியாக எஸ்.பி.பட்டினம் வரை அரசு பஸ் தினமும் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை நம்பி அரசு ஊழியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளனர். இந்த பஸ், குறிப்பிட்ட நேரத்தில் புறப்படுவதில்லை. பல நேரங்களில் இயங்குவதே இல்லை என பயணிகள் புகார் எழுப்பினர்.
தவிர, தினமும் ஒரே பஸ் இயக்கப்படாமல், வேறு வேறு பஸ்கள் இயக்கப்படுவதாகவும், பஸ்சில் ஊர் பெயர் பலகை இல்லாததால் பயணிகள் குழப்பம் அடைவதாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக முறையாக ஒரே பேருந்து இயக்கப்படுவதோடு பஸ்சில் எல்.இ.டி., பெயர் பலகை யும் பொருத்தப்பட்டு உள்ளது.
மேலும்
-
நலம் காக்கும் ஸ்டாலின் நரிப்பள்ளியில் முகாம்
-
பயணிகள் நிழற்கூடம் இடிப்பு: மக்கள் மறியல்
-
குளத்தில் மூழ்கி பெண் குழந்தை பலி
-
'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
-
.செந்தில் மெட்ரிக் பள்ளி மாணவி மாநில தடகள போட்டியில் சாதனை
-
ஒரே நாளில் 33,240 டன் ஏற்றுமதி சென்னை துறைமுகம் சாதனை