2 இடங்களில் அரசு ஊதியம் தி.மு.க., நிர்வாகி மனைவி மீது புகார்
இடைப்பாடி,:சேலம்
மாவட்டம் கொங்கணாபுரம், கோரணம்பட்டி ஊராட்சி, ராயணம்பட்டியை
சேர்ந்தவர் கோவிந்தன். ராயணம்பட்டி தி.மு.க., கிளை செயலர். இவரது
மனைவி தமிழரசி. கோரணம்பட்டி ஊராட்சியில் துாய்மை காவலராக உள்ளார்.
அதற்கு
மாதந்தோறும், 5,000 ரூபாய் தொகுப்பூதியம் பெறுகிறார். மேலும் அதே
ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஏரி வேலை
செய்வதாக கணக்கு எழுதப்பட்டு, அதற்கு சம்பளம் பெற்று வந்துள்ளார்.
இதுகுறித்து,
கோரணம்பட்டியை சேர்ந்த மூர்த்தி உள்ளிட்ட மக்கள், கொங்கணாபுரம்
பி.டி.ஓ., இளங்கோவிடம்(கி.ஊ.,) புகார் அளித்தனர். அதில்,
'ஆளுங்கட்சியை சேர்ந்த கிளை செயலரின் மனைவி என்பதால் தான், இரு
இடங்களில் அரசு பணத்தை சம்பளமாக பெற்று வருகிறார்' என
கூறப்பட்டிருந்தது.
'ஒரே நேரத்தில் ஒருவர் இரு இடங்களில், எவ்வாறு
வேலை பார்ப்பது' என, இளங்கோவிடம் கேட்டபோது, ''இதுகுறித்து
புகார் கொடுத்துள்ளார்கள். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இரு வேலைகளிலும் சம்பளம் பெற்றிருந்தால், ஒரு சம்பளத்தை திருப்பி பெறப்படும்,'' என்றார்.
மேலும்
-
இந்தியா தேடும் குற்றவாளிகள் 2 பேர் அமெரிக்காவில் கைது: நாடு கடத்த ஏற்பாடு
-
ஆப்ரிக்க நாடுகளில் ஜனாதிபதி சுற்றுப்பயணம்: அங்கோலாவில் சிவப்பு கம்பள வரவேற்பு
-
'சிக்கன் நெக்' பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியது இந்தியா!
-
திமுக வைப் போல கட்சி நடத்த அறிவு வேண்டும்: விஜயை மறைமுகமாக தாக்கி பேசிய ஸ்டாலின்
-
நவம்பர் 11ல் பிரதமர் மோடி பூடான் சுற்றுப்பயணம்
-
'இஸ்ரோ' விஞ்ஞானி ஆவேன் 'மாணவ விஞ்ஞானி' ரிஷிதாவின் லட்சியம்