பொதுவினியோக திட்ட குறைகேட்பு முகாம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் பொதுவினியோக திட்டத்தில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் நடந்தது.

தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறை சார்பில் நடந்த முகாமிற்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து புதிய ரேஷன்கார்டு, பெயர் சேர்த்தல் நீக்கல், முகவரி மாற்றம், முதியோர் மாற்றுத் திறனாளிகள் அங்கீகார சான்று உள்ளிட்ட மனுக்களைப் பெற்றார்.

தாசில்தார் செல்வமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர்கள் தயாநிதி, நாகராஜன், பொறியாளர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement