நடைவண்டி சிறுவர் இலக்கிய கழகம் சார்பில் நுால் வெளியீடு
புதுச்சேரி: புதுச்சேரி நடைவண்டி சிறுவர் கலை இலக்கிய கழகம் சார்பில் நுால் வெளியீட்டு விழா தமிழ் சங்கத்தில் நடந்தது.
மாநில முத்தமிழ் கழகத்தின் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். பிரபா வரவேற்றார்.
உசேன், தமிழ் சங்கத்தின் பொருளாளர் அருள்செல்வம், நண்பர்கள் தோட்டம் பொருளாளர் யுக பாரதி முன்னிலை வகித்தனர்.
நடைவண்டி சிறுவர் கலை இலக்கியக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பாலசுப்பிரமணியன் நோக்க உரையாற்றினார். பொதுப்பணித்துறைதலைமை பொறியாளர் வீரசெல்வம் பங்கேற்று, முருகேசன் எழுதிய 'புதுச்சேரி கடற்கரைகள்' என்ற நுாலினை வெளியிட, தொழிலதிபர் தங்கவேலுபெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, விஜயலட்சுமி எழுதிய 'சிங்க மழை காடு' மற்றும் 'கர்வம் பிடித்த பூசணிக்காய்' ஆகிய நுால்களை எழுத்தாளர் செல்வம் வெளியிட்டார்.
சீனு வேணுகோபால், சுந்தர முருகன் ஆகியோர் நுாலாய்வு செய்தனர்.
நெய்தல் நாடன், முன்னாள் எஸ்.பி., வீர பாலகிருஷ்ணன், தமிழ் சங்கத்தின்செயலர் சீனு மோகன்தாஸ், துணைத் தலைவர் திருநாவுக்கரசு வாழ்த்திப் பேசினர்.
ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கிய விசாகன், பச்சையம்மாள், ஜெயஸ்ரீ ஆகியோருக்கு சாவித்திரிபாய் புலே, ஜோதிராவ் புலே ஆகியோர் பெயரில்விருதுகள் வழங்கப்பட்டன. கழகத்தின் செயலர் யாழினி நன்றி கூறினார்.
மேலும்
-
40வது நாளை எட்டியது நிதி முடக்கம்: விதியை மாற்ற அமெரிக்க அதிபர் திட்டம்
-
2 யானைகள் மோதலில் தந்தத்தை இழந்த 'பீமா'
-
கோவாவில் 'அயர்ன் மேன் 70.3' போட்டி அசத்திய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா
-
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,300 சர்க்கரை ஆலைகளுக்கு எச்சரிக்கை
-
'மாஜி' காதலியுடனான படங்கள் பரப்பியவருக்கு அடி, உதை
-
லோக் ஆயுக்தா நீதிபதிகள் சொத்து விபரம் தாக்கல் செய்ய காங்., - எம்.எல்.சி., 'கிடுக்கி'