பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டி

புதுச்சேரி: ராமகிருஷ்ண வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.

சென்னை ராமகிருஷ்ண மடத்தின் நேரடி பார்வையில் இயங்கி வரும் ராமகிருஷ்ண வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் பள்ளி வளாகத்தில் நடந்தது.

போட்டிகளை பள்ளியின் தாளாளர் கணேசன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். இயக்குனர் கிருஷ்ணராஜூ முன்னிலை வகித்தனர்.

இதில், மாணவர்களின் பெற்றோர்களுக்கு மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளியின் துணை முதல்வர் சுந்தரமூர்த்தி மற்றும் அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement