குற்றவாளிகளுக்கு பயமில்லை; தமிழக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
சென்னை:திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் அடுக்கடுக்காக தொடர்ந்து படுகொலைகள் நடந்து வருகிறது. குற்றவாளிகளுக்கு சுத்தமாக குளிர்விட்டு போனது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: திருச்சி பீமாநகரில் உள்ள காவலர் குடியிருப்பிற்குள்ளேயே ஒருவர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பில்லை என்ற உண்மையை நெற்றியில் அடித்தாற்போல நமக்கு மீண்டுமொருமுறை உணர்த்தியுள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், பட்டப்பகலில் போலீஸ் ஸ்டேஷனின் அருகிலும் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயும் ஒருவரை வெட்டிச் சாய்ப்பது பேஷனாகிவிட்டது.
போலீசாரின் கைகள் கருப்பு-சிவப்பு கயிற்றால் கட்டப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்ட குற்றவாளிகளுக்கு சுத்தமாகக் குளிர்விட்டுப் போய்விட்டது.
போலீசார் மீதான மக்களின் நம்பிக்கை இத்துப் போய்விட்டது. இது நமது சமூக அழிவிற்கான அறிகுறி.
தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு இப்படி சீரழிந்து கிடக்கையில் முழுநேர டிஜிபியை இன்னும் நியமிக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் ஆளும் அரசின் ஆணவம் சகித்துக் கொள்ள முடியாதது. பொதுமக்களின் உயிர்களை வைத்து இப்படி பல்லாங்குழி ஆடிக்கொண்டிருக்கும் இந்தத் தீயசக்தி திமுக அரசு, முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய கள்ளிச்செடி. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மேலும்
-
டில்லி கார் குண்டுவெடிப்பு: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி
-
உ.பி., மஹாராஷ்டிராவில் உஷார்நிலை : பாதுகாப்பு அதிகரிப்பு
-
பிரதமர் மோடி எனது மூத்த சகோதரர், ஆன்மிக குரு: பூடான் பிரதமர்
-
அமெரிக்க அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர மசோதா; டிரம்ப் நிம்மதி
-
நக்சல் ஒழிப்பின் அடையாளமானது பீஹாரின் சோர்மாரா: 25 ஆண்டுகள் கழித்து நாளை வாக்களிக்கும் மக்கள்
-
நிதிஷ்குமார் சேவை பீஹாருக்கு தேவை: சிராக் பாஸ்வான்