பிரதமர் மோடி எனது மூத்த சகோதரர், ஆன்மிக குரு: பூடான் பிரதமர்

திம்பு: இந்திய பிரதமர் மோடி, எனது மூத்த சகோதரர், ஆன்மிக குரு என்று பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கோ குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி இரண்டுநாள் அரசுமுறை பயணமாக (நவம்பர்11-12) பூடானுக்கு செல்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடி குறித்து பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திம்புவில் ஷெரிங் டோப்கோ அளித்த பேட்டி:
பிரதமர் மோடியை ஒரு அரசியல் தலைவராக மட்டுமல்ல, அவர் ஒரு "ஆன்மீக குரு", மேலும் அவர் என்னை வழிநடத்தும் வழிகாட்டி.
அவரது வருகைக்காக, நான் மட்டுமல்ல பூடான் நாடே உற்சாகத்தில் உள்ளது, ஒரு பெரிய ஆன்மிக நிகழ்வான உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழாவுடன் ஒத்துபோகிறது.

இரு நாடுகளின் கூட்டாண்மையின் ஒரு மூலக்கல்லான எரிசக்தி துறையில் குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பால் குறிக்கப்படுகிறது.


நாங்கள் ஒரு மிகப் பெரிய 1000 மெகாவாட் நீர்மின் திட்டத்தைத் தொடங்கி வைக்கப் போகிறோம், பின்னர் கட்டுமானத்தைத் தொடங்கப் போகிறோம்.இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு மேலும் வலுவடையும்.​​பிரதமர் மோடி குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைப்பார்.

மேலும் அவர் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழாக்கள், கால சக்கர அதிகாரமளிப்பு, நினைவுச்சின்னத்தைப் பார்ப்பது வரை ஆன்மிக விழாக்கள் தொடரும்.இவ்வாறு ஷெரிங் டோப்கோ கூறினார்.

Advertisement