டில்லியில் கார் குண்டுவெடிப்பு: 9 பேர் உயிரிழப்பு
புதுடில்லி: டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 9 பேர் பலியாகினர். 24 பேர் காயமடைந்துள்ளனர்.
பாதுகாப்பு மிக்க டில்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேஷனின் 1வது நுழைவு வாயில் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் அருகில் இருந்த 13 வாகனங்கள் எரிந்து நாசமாகின. இச்சம்பவத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். 24 காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் டில்லியில் உள்ள லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. குண்டுவெடித்ததால், காரில் இருந்த பாகங்ள் 300 அடி தூரத்திற்கு வீசி எறியப்பட்டன.












என்ஐஏ விரைவு
குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
பிரதமர் ஆலோசனை
டில்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தார்.
மெதுவாக சென்ற காரில்
டில்லி போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்சா கூறியதாவது: செங்கோட்டையில் இன்று மாலை 6:52 மணிக்கு மெதுவாக சென்று கொண்டிருந்த காரில் குண்டுவெடித்தது. அப்போது அங்கு சிலர் இருந்தனர். அருகில் இருந்த மற்ற வாகனங்களும் சேதம் அடைந்துள்ளன. டில்லி போலீஸ், என்ஐஏ, என்எஸ்ஜி, தடயவியல் துறை நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். விசாரணை நடக்கிறது. கூடுதல் தகவல் கிடைத்ததும் பகிரப்படும். சிலர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பரபரப்பு
ஹரியானாவில் 2,900 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வன்மையாகக் கண்டிக்கிறோம் ........ வன்முறை தீர்வாகாது ...
எவனா இருந்தாலும் சுட்டு தள்ளுங்க
உளவுத்துறை எதுக்கு இருக்கு ???? காங்கிரசின் நகர்வுகளை மட்டும் கவனிக்கவா ????
டபுள் என்ஜின் சர்க்கார் , கெஜ்ரிவால் இருக்கும்போது கூட இப்படி இல்லை , என்று பிஜேபி ஆட்சி டெல்லியில் வந்ததோ அப்போது இருந்தே அதுவும் டெல்லியில் எல்லா டாப் பாதுகாப்பு செக்யூரிட்டி இருந்தும் இப்படி அசிங்கம்
உங்கள் சொந்த நாட்டுக்கு போக வேண்டியது தானே …
இதை விட பிரமாதம் என்ன தெரியுமா? மாண்பு மிகு சாராய யாவாரி திருச்சியில் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் ஒரு கிமீ தூரத்தில் எஸ் ஐ வீட்டில் அடைக்கலமானவனுக்கு அவர் வீட்டிலேயே வெட்டு கொலை. இது அசிங்கமே இல்லை. நாகரீகத்தின் உச்சம். இதை பத்தி க உ பி எவனுமே பேச மாட்டான்கள். ஏன்னா புதுசா இப்ப பண்ணிய பன்னை வாயில் வச்சு அமுக்கியாச்சு. அதுனால அவன்களால் பேச முடியாது
கைது விசாரணை எல்லாம் இருந்தால் இப்படித்தான். என்கவுண்டர் பெஸ்ட்
பிஜேபி ஆட்சிசெய்யிர லட்சணம்
இது மூர்க்க காட்டுமிராண்டிகளின் பயங்கரவாதிகளின் சதி செயல்னு தெளிவா தெரியுது தூண்டிவிடுறது ...... தானே கூமுட்ட
தீவிரவாதிகளின் சதி செயல்.... உளவுத்துறை என்ன செய்கிறதுமேலும்
-
டில்லி கார் குண்டுவெடிப்பு: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி
-
உ.பி., மஹாராஷ்டிராவில் உஷார்நிலை : பாதுகாப்பு அதிகரிப்பு
-
பிரதமர் மோடி எனது மூத்த சகோதரர், ஆன்மிக குரு: பூடான் பிரதமர்
-
அமெரிக்க அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர மசோதா; டிரம்ப் நிம்மதி
-
நக்சல் ஒழிப்பின் அடையாளமானது பீஹாரின் சோர்மாரா: 25 ஆண்டுகள் கழித்து நாளை வாக்களிக்கும் மக்கள்
-
நிதிஷ்குமார் சேவை பீஹாருக்கு தேவை: சிராக் பாஸ்வான்