வேட்டி, லுங்கிக்கு புவிசார் குறியீடு தமிழகம் பரிந்துரை
சென்னை : நாகர்கோவில் வேட்டி, குடியாத்தம் லுங்கி உட்பட, தமிழகத்தின் ஐந்து தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடு வழங்க, மத்திய அரசுக்கு மாநில கைத்தறித் துறை பரிந்துரை செய்துள்ளது.
மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் சார்பில், தனித்துவமான தயாரிப்புக்கு, புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. உணவு, வேளாண் பொருட்கள், கைத்தறி தயாரிப்புகள் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், 69 பொருட்களுக்கு, மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில், காஞ்சி பட்டு புடவை, உள்ளிட்ட 10 கைத்தறி தயாரிப்புகளுக்கு, இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநுால் துறை சார்பில், நாகர்கோவில் வேட்டி, குடியாத்தம் லுங்கி, உறையூர் பருத்தி சேலை, சின்னாளப்பட்டி பட்டு சேலை, திருவாரூர் கூறைநாடு சேலை ஆகிய ஐந்து ரகங்களுக்கு, புவிசார் குறியீடு வழங்க கோரி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும்
-
பினாமி பெயரில் பி.எப்.ஐ., அறக்கட்டளை வெளிநாட்டு வசூல் குறித்து விசாரணை
-
மகனை காப்பாற்ற முயன்ற தாய் அடித்து கொலை
-
கோலாரில் விளையாட்டு போட்டியில் மாணவ - மாணவியர் அசத்தல்
-
'பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் சிறுமியருக்கு பாதுகாப்பு வழங்குங்கள் '
-
தோழி இறந்ததால் சிறுமி தற்கொலை
-
மேம்பாலத்தில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை