மேம்பாலத்தில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை
நாயண்டஹள்ளி: மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து, மேற்கு வங்க மாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரசன்ஜித் தாஸ், 29. பெங்களூரு ஹுடியில் வசித்தார். கேரேஜில் தொழிலாளியாக வேலை செய்தார். நேற்று மதியம் மைசூரு ரோட்டில் இருந்து ஹுடிக்கு தன் நண்பர் மிதுன் என்பவருடன் ஆட்டோவில் சென்றார்.
நாயண்டஹள்ளி மேம்பாலத்தில் ஆட்டோ சென்றபோது, ஆட்டோவை நிறுத்த கூறிய பிரசன்ஜித் தாஸ், ஆட்டோவி ல் இருந்து இறங்கி, மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். தலையில் பலத்த காயம் அடைந்தவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
குடும்ப தகராறில் தற்கொலை செய்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. பேட்ராயனபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம்! உளுந்துார்பேட்டையில் மக்கள் அவதி
-
வாக்காளர் பட்டியல் திருத்த பணி: கலெக்டர் நேரில் ஆய்வு
-
6991 சிறுமியர் பாலியல் பலாத்காரம்: அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார் பழனிசாமி புகார்
-
மண் மாசடைந்து உள்ளதா? தொழில் பகுதிகளில் ஆய்வு
-
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு; கோர்ட்டில் செந்தில் பாலாஜி ஆஜர்
-
நான்தேத் - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு
Advertisement
Advertisement