அவதுாறு வழக்கில் குறுக்கு விசாரணை: வந்தார் அண்ணாமலை; வரவில்லை டி.ஆர்.பாலு!
சென்னை: அவதுாறு வழக்கில் குறுக்கு விசாரணை செய்வதற்காக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வந்திருந்த நிலையில், டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வரவில்லை. இதனால் வழக்கு விசாரணை டிச.,24க்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த, 2023, ஏப்.,14ல், தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை இருந்தபோது, 'டி.எம்.கே., பைல்ஸ்' என்ற பெயரில், திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். ''தி.மு.க., பொருளாளரும், எம்.பி.,யுமான டி.அர். பாலுவுக்கு, 21 நிறுவனங்கள் இருப்பதாகவும், அவருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும்' அண்ணாமலை கூறினார்.
இதையடுத்து, அண்ணாமலை மீது, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாலு அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் டிஆர்பாலு கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில், 'வழக்கில் நானே டிஆர்பாலுவிடம் நேரடியாக குறுக்கு விசாரணை செய்யப்போவதாக' அண்ணாமலை அறிவித்தார். அந்த குறுக்கு விசாரணை இன்று நவ.,11ல் நடப்பதாக இருந்தது. டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை நடத்த இருக்கும் குறுக்கு விசாரணையை எதிர்பார்த்து பல்வேறு தரப்பினர் காத்திருந்தனர்.
இன்று (நவ., 11) அண்ணாமலை குறுக்கு விசாரணைக்காக சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு தயாராக வந்திருந்தார். ஆனால் டி.ஆர்.பாலு கோர்ட்டுக்கு வரவில்லை. நீதிபதிகளிடம், 'டிஆர்பாலு எம்.பி.,யாக இருப்பதால் அதற்கான பணியில்அவர் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்' என்று அவரது வக்கீல்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
பின்னர் வழக்கு விசாரணை டிச.,24க்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரத்தில், சென்னை, சுவாமி சிவானந்தா சாலையில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டிஆர்பாலு பங்கேற்றார்.
வாசகர் கருத்து (32)
Arjun - ,இந்தியா
11 நவ,2025 - 14:52 Report Abuse
அது வழக்கு போடும் போது தெரிந்திருக்கனும் மற்றவர்களை போல நினைத்து கொண்டார்? அண்ணாமலை ஆதாரங்கள் இல்லாமல் பேச மாட்டார் 0
0
Reply
Field Marshal - Redmond,இந்தியா
11 நவ,2025 - 14:50 Report Abuse
பாலு பந்தர் எல்லாம் கோர்ட்டுக்கு வராதது நல்லது 0
0
Reply
சத்யநாராயணன் - ,
11 நவ,2025 - 14:40 Report Abuse
இதன் மூலமே டி ஆர் பாலுவின் யோகியதை மற்றும் ஒழுக்கம் தெரிந்து விட்டது கரை படிந்தவன் வெட்கமில்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறான் அவன் வராததை வைத்து அவனுக்கு எதிராக தீர்ப்பு எழுதிவிடலாம் ஆனால் இந்திய அரசியல் சட்டங்கள் ஆயிற்றே மக்களை சுரண்டி கொள்ளை அடிப்பவர்களுக்கும் ஊழலில் திளைத்து ஊர் சுற்றுபவர்களுக்கும் தான் எப்போதும் சாதகமாக அவர்களுக்குத்தான் துணை நிற்கும் பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் மீது ஆதாரங்களுடன் குற்றம் சுமத்தப்பட்டால் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்பதை தான் முதல் வேலையாக கொள்ள வேண்டும் ஊழல் செய்த எம்பிக்களுக்கு எந்த விதிவிலக்கும் தரக்கூடாது வேறு எங்காவது எதையாவது கொள்ளையடிக்க தான் போயிருப்பார் 0
0
Reply
kannan sundaresan - ,
11 நவ,2025 - 14:38 Report Abuse
திமுவிற்கு வாக்களித்த மக்களே, 2026ல் மீண்டும் திமுகவை தேர்ந்தெடுத்தால் தமிழ்நாட்டின் நிலைமை எப்படி போகும் என்று சொல்ல முடியாது 0
0
Reply
NALAM VIRUMBI - Madurai,இந்தியா
11 நவ,2025 - 14:36 Report Abuse
மானம், ஈனம் எல்லாம் திராவிஷக் கட்சிக்கு இருக்காது. சாக்கு போக்கு சொல்லி எத்தனை முறை தப்ப முடியும் என்று பார்ப்போம். 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
11 நவ,2025 - 14:35 Report Abuse
பாலுவை சுட்டு பிடிக்க உத்தரவு போட வேண்டும். அப்பதான் வழிக்கு வருவார். பார்லிமென்ட் வளாகத்தில் பாலு உள்ளே நுழையக்கூடாது என்று மன்மோகன் சிங் உத்தரவு போட்டிருந்தார். பாலு அப்பேர்ப்பட்டவர். 0
0
Reply
Shekar - ,
11 நவ,2025 - 14:35 Report Abuse
பயம் கியம்மெல்லாம் எனக்கில்லை. ராத்திரி சாப்பிட்ட பரோட்டா வயித்த கொஞ்சம் பதம் பார்த்துவிட்டது. 0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
11 நவ,2025 - 14:35 Report Abuse
21 கார்பொரேட் நிறுவனங்கள் இருப்பதாகவும், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும் கூறினாராம் ....இவனுங்கதான் அம்பானி அதானி என்று கூவறவனுங்க ... 0
0
Reply
ஜெகதீசன் - ,
11 நவ,2025 - 14:33 Report Abuse
அதெப்படி வரும்? அண்ணாமலை IPS பற்றி தான் தெரியுமே. நெருப்பு என்று. 0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
11 நவ,2025 - 14:30 Report Abuse
டி ஆர் பாலு திராவிட முன்னேற்ற கட்சியை சார்ந்தவர். இந்த கட்சியில் ஹிந்து மதத்தை விட்டு வேறு மதத்தவர் ஆக மாறியுள்ளனர். இதில் ட்ட.ஆர் பாலு மதம் மாறியவரா என்பது தெரிவில்லை. மதம் மாறினாலும் பெயரை மாற்றி கொள்வது இல்லை. அரசியலில் ஜோசப் விஜய் என்பவர். அவர் ஜோசப் என்ற பெயரை கூறுவதில்லை பயமா வெட்கமா என்பது புரியவில்லை, ட்ட ஆர் பாலு மதம் மாறவில்லை ஏற்றால் விசாரணை டிசம்பர் 24 ஏற்புடையது. 0
0
Reply
மேலும் 22 கருத்துக்கள்...
மேலும்
-
டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ விசாரணை துவக்கம்
-
கோவில் பராமரிப்பில் திமுக அரசு மெத்தனம்: நயினார் குற்றச்சாட்டு
-
வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை கேள்வி கேளுங்கள்: நிர்மலா சீதாராமன்
-
எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து களப்போராட்டம்: முதல்வர் ஸ்டாலின்
-
நாட்டு நலனில் நாட்டமும் நடுநிலைமையும் 'தினமலர்' தனித்தன்மைகள்
-
தமிழர்களின் கலாசார அடையாளம் 'தினமலர்'
Advertisement
Advertisement