5 பவுன் நகை, பணம் திருட்டு

கள்ளிமந்தையம்: பெருமாள் கோயில் வலசை சேர்ந்தவர் சண்முகம். வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தார். நேற்று மதியம் 3:30 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் நகை , ரூ.15 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement