எஸ்.ஐ.ஆர்., படிவத்தை பார்த்தால் தலை சுற்றுகிறது: ஸ்டாலின் புலம்பல்
சென்னை: சென்னை கொளத்துார் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில், அத்தொகுதியின் எம்.எல்.ஏ.,வும் முதல்வருமான ஸ்டாலின், கட்சியின் பாக முகவர்களுடன் கலந்து ரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:
சமீப நாட்களாக எங்கு சென்றாலும், எஸ்.ஐ.ஆர்., என்னும் வாக்காளர் திருத்தப் பட்டியல் குறித்து தான் பேசுகின்றனர்.
இந்திய குடிமகன் ஒவ்வொருவரும், நாங்கள் இந்தியாவின் குடிமகன் தான் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தேர்தல் கமிஷன் வாயிலாக, மத்திய அரசு, இப்படியொரு சுமையை எல்லார் மீதும் திணித்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் திருத்தப் பட்டியல் பணி நடக்கிறது. உண்மையான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி விடுவரோ என்ற அச்சம் எல்லா மட்டத்திலும் உள்ளது.
அப்படி ஏதும் நடக்கக்கூடாது என்பதற்காகவே, நீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளோம்; போராட்டம் நடத்தி உள்ளோம். அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி, அதில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
மத்திய அரசு, தேர்தல் கமிஷன் உள்ளிட்டவை கொடுக்கும் நெருக்கடிகளை கடந்துதான், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கு, தி.மு.க.,வினரும் கூட்டணி கட்சியினரும் அயராது உழைக்க வேண்டும்.
வாக்காளர் திருத்தப் பட்டியல் பணி நிறைவுற 20 நாட்களே உள்ளன. காலம் குறைவாக இருப்பதால், தலை சுற்றும் எஸ்.ஐ.ஆர்., படிவத்தை, ஒவ்வொரு வாக்காளரும் முழுமையாக நிரப்பி அளிக்க, தி.மு.க.,வினர் உதவிட வேண்டும்.
வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிக்கு எதிராக மேற்கு வங்க மக்கள் பெரிய அளவில் கொந்தளித்து போராட்டம் நடத்தி உள்ளனர். ஆனால், தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் உதிரி கட்சியினர், வாக்காளர் திருத்தப் பட்டியல் பணியை ஆதரித்து வழக்கு போட்டுள் ளனர்.
இவ்வாறு பேசினார்.
இந்த சார் படிவத்தை பூர்த்தி செய்ய சிரமப்படும் இவர் எப்படி முதலமைச்சர் பணியை செய்கிறார்?
பீகார் ரிசல்ட் பார்த்து தான் தலை சுற்றி இருக்கும் தொரைக்கு
உண்மையான வாக்காளர்களுக்கு தலை சுற்றுவதில்லை. கேட்கும் விவரங்களை கொடுத்து விடலாம். இறந்தவர்களுக்கும்,ஒன்றுக்கு மேல் வாக்கு அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் தான் பிரச்சினை. இவர் தொடுத்துள்ள வழக்கிலும், SIR சரி ஆனால் இப்போது வேண்டாம், 2026 தேர்தலுக்குப் பின் வைத்துக்கொள்ளலாம் என்று கேட்டிருக்கிறார். கள்ள ஒட்டினால் தான் தனது கட்சி வெற்றி பெறும் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார். அந்த பயம் தான். ஆனால் தமிழ் நாட்டில் SIR பணி வேகமாக நடக்கிறது.
நமக்கு தமிழே தலை சுற்றும். தமிழில் உள்ள திருக்குறளையே "இளமை புகுத்தி விடும்" என்று சொல்லுவோம். "நகராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்துவோம்" என்று பேப்பரைப் பார்த்து படிக்கும் பொழுதே உளறுவோம். ஆங்கிலத்தில் இருந்தால் தலை சுற்றாதா? சாருக்கு ஸ்டராங் டீயும், ரெண்டு அனாசினும்.
அறிவுள்ளவனுக்கு தலை சுத்தாது பகுத்தறிவு கூட்டத்திற்கு அது இல்லாததால் சுத்துது 70 வயசு
ஆனவனுக்கு டோப்பா எதுக்குமேலும்
-
மானாமதுரையில் துப்புரவு பணி படுமோசம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
-
மாணவ,மாணவியர்களுக்கு சைக்கிள் வழங்கிய துணை முதல்வர் உதயநிதி
-
மக்களை தேடி மருத்துவம் திட்ட பயனாளிகள்... 2.91 லட்சம் பேர்; மாவட்டத்தில் 14 ஆயிரம் பேருக்கு சிகிச்சை
-
போலீஸ் ஸ்டேஷன் திறப்பு ஒத்தி வைப்பு
-
தேசிய குழந்தைகள் தினம் விழிப்புணர்வு நடை பயணம்
-
கிடப்பில் பஸ் டெப்போ: பயணிகள் தவிப்பு