செம்பேரிக்கு டவுன் பஸ் மக்கள் கோரிக்கை 

பெண்ணாடம்: திட்டக்குடியில் இருந்து பெண்ணாடம் வழியாக செம்பேரிக்கு அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டக்குடி பணிமனையில் இருந்து பெண்ணாடம் வழியாக செம்பேரி வரை (தடம் எண் - 7) டவுன் பஸ் இயக்கப்பட்டது.

இந்த பஸ்சை பயன்படுத்தி பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி மற்றும் அரியலுார் மாவட்டம், கோட்டைக்காடு, ஆலத்தியூர், புதுப்பாளையம், தெத்தேரி உட்பட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியூர் சென்று வந்தனர்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், இந்த டவுன் பஸ் எவ்வித அறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டது.

இதனால் இப்பகுதி மக்கள் பைக், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் 5 கி.மீ., துாரமுள்ள பெண்ணாடம் வந்து, அங்கிருந்து திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டி உள்ளது.

இதனால், இரு மாவட்டங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவர்கள், விவசாயிகள் சிரமம் அடைகின்றனர்.

இதையொட்டி செம்பேரிக்கு மீண்டும் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement