காஷ்மீரில் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் பலி; 30 பேர் காயம்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள நவ்காம் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நவ்காம் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இந்த ஸ்டேஷனில் திடீரென வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர்.
இந்த சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறுவது இடம் பெற்றுள்ளது. பரிதாபாத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை கையாளும் போது விபத்து நிகழ்ந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சில ரசாயனங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.
விபத்து நிகழ்ந்த பகுதி சீல் வைக்கப்பட்டதால், மோப்ப நாய்களுடன் பாதுகாப்புப் படையினர் வளாகத்தைச் சுற்றி வளைத்தனர். ஸ்ரீநகர் துணை கமிஷ்னர் அக்ஷய் லப்ரூ உள்ளூர் மருத்துவமனையில் காயமடைந்தவர்களைச் சந்தித்தார்.
ஏற்கனவே, இந்த வாரத் தொடக்கத்தில் டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், காஷ்மீர் போலீஸ் ஸ்டேஷனில், வெடி விபத்து நிகழ்ந்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
நம்ம ஊர் முஸ்லீம் நண்பர் விரக்தியுடன் சொல்கிறார்.முஸ்லீம்கட்கு வீடு வாடகைக்கு கொடுக்க மாட்டார்.பொது நிகழ்ச்சிகட்கு கூப்பிட மாட்டார்கள். முஸ்லீம் கடைகளில் பொருள் வாங்க வரமாட்டார்கள். பஸ்லே பக்கத்திலே உட்கார மாட்டாங்க. பேச மாட்டாங்க. ஒரு தீண்டத்தகாத சமுதாய உறுப்பினராக வாழத்தான் வேண்டும். கொடுமை. எங்கயோ எவனோ குண்டு வைத்ததற்காக ஒரு சமுதாயத்திற்கே மிகப்பெரிய தண்டனை.
இஸ்லாம் ஒரு கோழை பயங்கரவாதம்
இராணுவம் செய்யவேண்டிய வேலையை எப்படி காவல்துறை செய்ய முடியும்? காவல்துறைக்கு போதிய பயிற்சி தேவை?
பாகிஸ்தானின் அழிவின் அடுத்த கட்டம் நிறைவேறிக்கொண்டிருக்கிறது. மூன்றாம் கட்டத்திற்கு முன், இரண்டாவது ஆபரேஷன் சிந்தூர் Operation Sindoor - 2 நடைபெரும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.மேலும்
-
போக்குவரத்து விதிமீறல் ரூ.200 கோடி அபராதம் வசூல்
-
அனைத்து பஸ்களிலும் அவசர கதவு கட்டாயம்
-
துங்கபத்ரா தண்ணீர் திறக்க சிவகுமார் மறுப்பு
-
குழந்தைகள் அதிகம் சாப்பிடும் 'பெங்கால் வெஜ் சாப்ஸ்'
-
முட்டாள்தனத்தில் இருந்து விலகியே இருங்கள்! மாணவர்களுக்கு முதல்வர் சித்து அறிவுரை
-
கர்நாடக மாநில தி.மு.க., கூண்டோடு கலைப்பு; பதவி எதிர்பார்த்தவர்கள் பெரும் ஏமாற்றம்