வெனிசுலா மீது படையெடுக்க போகிறாரா டிரம்ப்; போர்க்கப்பல்கள் அணி வகுப்பதால் பதற்றம்
வாஷிங்டன்: கரீபியன் கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் அணிவகுத்து வருகின்றன.15 ஆயிரம் படைவீரர்களையும் அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் வைத்துள்ளது. வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது. வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவும், அதிபர் டிரம்பும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், சந்தேகத்துக்குரிய கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆனால், போதை கடத்தல் குற்றச்சாட்டை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ திட்டவட்டமாக மறுத்துஉள்ளார். கப்பல்களில் பயணித்தவர்கள் மீனவர்கள், தொழிலாளர்கள் என்றும், சர்வதேச சட்டத்தை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், கரீபியன் கடற்பகுதியில் போர்க் கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது. இங்குள்ள போர்டோரிகோ தீவில் மூடப்பட்ட விமான தளம் ஒன்றை அமெரிக்கா மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. 20 ஆண்டுக்கு பிறகு இங்கு அமெரிக்காவின் எப் - 35 ரக போர் விமானங்கள், கனரக ஹெலிகாப்டர்கள், சரக்கு விமானங்கள் வந்து இறங்கியுள்ளன.
மேலும், உலகிலேயே மிகப் பெரிய மற்றும் அதிநவீன விமானம் தாங்கி போர்க் கப்பலான 'யு.எஸ்.எஸ்., ஜெரால்டு போர்டு' ஒரு குழுவுடன் கரீபியன் கடல் பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது.
கரீபியன் கடலில் ஏற்கனவே பல போர்க்கப்பல்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதுமட்டுமன்றி 15 ஆயிரம் படைகளையும் அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆப்பரேஷன் சதர்ன் ஸ்பியர் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டிரம்ப் சொல்வது என்ன?
இதனால் வெனிசுலா மீது அதிபர் டிரம்ப் படையெடுக்க போகிறார் என அமெரிக்க வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தாக்குதலை எதிர்நோக்கி, தன் படைகளை வெனிசுலாவும் தயார் நிலையில் வைத்துள்ளது.
இது குறித்து அதிபர் டிரம்ப், ''வெனிசுலா மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து நான் முடிவு எடுத்து விட்டேன்,'' என்று தெரிவித்துள்ளார். ஆனால் எந்த விதமான நடவடிக்கை என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இந்த போர்க்கப்பல்கள் அணிவகுப்பு வெனிசுலா மீது தாக்குதல் நடத்துவதற்காகவா அல்லது அச்சுறுத்தல் விடுப்பதற்காகவா என்று அமெரிக்க ராணுவம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
கரீபியன் கடலில் அமெரிக்க ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவது ஒரு பொறுப்பற்ற செயல் என்று வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.
வெனிஸுவேலா போதை மருந்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மக்களுக்கு கொடுப்பதில்லை. எல்லா வளமமும் இருந்தும் வாரிசு சர்வாதிகாரி கையில் சிக்கி பிச்சைக்கார நாடாக திகழ்கிறது. கட்டுக் குடும்பத்திடம் சிக்கி தமிழகம் சீரழிவதுபோல.
இவனுக தான் ரஷ்யா நாடு உக்ரைன் நாட்டின் மீதான் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கூறிய யோக்கிய சிகாமணி.... ரஷ்யா நாட்டை குறை கூற உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ?
டிரம்புக்கு போதாத காலம்..பாக்கிஸ்தான் அதிபர் இதறகாக ஒரு உலக அளவிலான அவார்ட் வேணும் என்று கேட்பார் ..
இந்த பேரிக்காய் நாடும், நேட்டோ அமைப்பும் அநேகமாக அடுத்த உலகப்போரை எதிர்பார்க்கிறார்கள் போலும்.....மேலும்
-
ப்ளூ ப்ரின்ட் எப்போது... பீஹாரில் ஆட்சியமைப்பது குறித்து சிராக் பாஸ்வான் சொன்ன தகவல்
-
ராஜஸ்தானில் வேன்- லாரி மீது மோதி விபத்து; 6 பேர் பரிதாப பலி
-
பட்டியல் ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் விலக்கப்படுவதை ஆதரிக்கிறேன்; தலைமை நீதிபதி கவாய் உறுதி
-
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை; போட்டு உடைத்தார் காங்கிரஸ் தலைவர் ஷக்கீல் அகமது
-
தைவானுக்கு ஆதரவாக ஜப்பான் பிரதமரின் கருத்து; சீறிய சீனாவால் பரபரப்பு
-
செம்மொழி பூங்காவை திறக்க அரசு அவசரம்: நெருக்கடிக்கு இடையே வேலைபார்க்கும் அதிகாரிகள்