ஓட்டு திருட்டு விழிப்புணர்வு கூட்டம்
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதி காங்., சார்பில், ஓட்டு திருட்டு தொடர்பான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மற்றும் கையெழு த்து இயக்கம் திருக்கனுார் கடை வீதியில் நடந்தது.
மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், கார்த்திகேயன் ஓட்டு திருட்டை கண்டித்து பேசினர்.
வட்டார தலைவர் பரமசிவம், தொகுதி பொறுப்பாளர் தனுசு, மாநில பொதுச் செயலாளர்கள் சுரேஷ், முத்துரங்கம், மாநில செயலாளர் ரகுபதி, ராஜிவ் பஞ்சாயத்து அமைப்பு தேசிய ஒருங்கிணைப்பாளர் இனாமுல் ஹசன் மற்றும் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் ஓட்டு திருட்டு தொடர்பான கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏழு மாவட்டங்களில் இன்று மிக கனமழை: தமிழகம் நோக்கி நகருது காற்றழுத்த தாழ்வு
-
அரசுப்பள்ளி மாணவர்கள் கற்றலில் பின்னடைவு! புலம்பெயர் மாணவர்கள் காரணமாம்!
-
கோடை பின்னலாடை ஆர்டர்கள் கைகூடும்: உதவிக்கரம் நீட்டிய மத்திய அரசு
-
ராணுவ முகாமில் இயற்கை மீட்புக்கு முயற்சி! 1,000 சோலை மரக்கன்று நடவு பணி
-
பீஹார் தேர்தல் வெற்றி: நிதிஷ் நீடிக்க ஆதரவு!
-
இட ஒதுக்கீடு போராட்டம் பா.ம.க.,வினர் ஆலோசனை
Advertisement
Advertisement