விவேகானந்தா கல்லுாரியில் கைவினை பயிற்சி பட்டறை
புதுச்சேரி: புதுச்சேரி,விவேகானந்தா கல்வியியல் கல்லுாரியில் கைவினை களிமண் (டெரகோட்டா) பயிற்சி பட்டறை நடந்தது.
டெரகோட்டா நிபுணர் முனுசாமி தலைமை தாங்கி, மாணவர்களுக்கு களிமண் உருவாக்கும் முறைகள், வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் பாரம்பரிய கைவினை கலைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
கல்லுாரி முதல்வர் சிங்காரவேலு வழிகாட்டுதல் படி, நுண்கலைத் துறை உதவி பேராசிரியர் ஜெயந்தி, ஒருங்கிணைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது.இதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, களிமண்ணைக் கையாளுதல் மற்றும் வடிவமைத்தல் குறித்து அனுபவம் பெற்றனர். மாணவர்கள் பல்வேறு சிற்பங்கள், சிறு பொம்மைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் என, 200க்கும் மேற்பட்ட டெரகோட்டா பொம்மைகளை தயாரித்தனர்.
மாணவர்கள் தயாரித்த பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏழு மாவட்டங்களில் இன்று மிக கனமழை: தமிழகம் நோக்கி நகருது காற்றழுத்த தாழ்வு
-
அரசுப்பள்ளி மாணவர்கள் கற்றலில் பின்னடைவு! புலம்பெயர் மாணவர்கள் காரணமாம்!
-
கோடை பின்னலாடை ஆர்டர்கள் கைகூடும்: உதவிக்கரம் நீட்டிய மத்திய அரசு
-
ராணுவ முகாமில் இயற்கை மீட்புக்கு முயற்சி! 1,000 சோலை மரக்கன்று நடவு பணி
-
பீஹார் தேர்தல் வெற்றி: நிதிஷ் நீடிக்க ஆதரவு!
-
இட ஒதுக்கீடு போராட்டம் பா.ம.க.,வினர் ஆலோசனை
Advertisement
Advertisement