எஸ்.ஐ.ஆர்., பணியை புறக்கணித்து வருவாய்த்துறையினர் வேலைநிறுத்தம்
சேலம், தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை அவசர கதியில் முடிக்க நிர்பந்திப்பதை கண்டித்து, சேலம் மாவட்ட வருவாய்த்துறையினர் நேற்று ஒருநாள், அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தாசில்தார், சர்வேயர், வி.ஏ.ஓ., உதவியாளர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையை சேர்ந்த, 800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டனர். இதன் எதிரொலியாக, சேலம் கலெக்டர் அலுவலக வருவாய்த்துறை பிரிவு உள்ளிட்ட அலுவலகங்கள் வெறிச்சோடின.
இப்போராட்டத்தால், வீடுகள் தோறும் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கி, விபரங்களை பூர்த்தி செய்து திரும்ப பெறும் பணியை, டிச., 4க்குள் முடிப்பதில் தாமதம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தாதகாப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினருக்கு அமைச்சர் பாராட்டு
-
துணை முதல்வர் பிறந்தநாளை 2 மாதம் கொண்டாட முடிவு
-
கார் - மினி பஸ் மோதல் எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு
-
பள்ளி முன் வேன் டிரைவர்கள் இடையூறு கலெக்டருக்கு புகார் அனுப்பிய ஹெச்.எம்.,
-
ஏற்காட்டில் பனிமூட்டத்துடன் சாரல் மழை விடுதிகளில் முடங்கிய சுற்றுலா பயணியர்
-
வ.உ.சி., நினைவு நாளில் பா.ஜ.,வினர் அஞ்சலி
Advertisement
Advertisement