பஸ்சில் தகராறு: வாலிபர் கைது

தலைவாசல், தலைவாசல், சிறுவாச்சூரை சேர்ந்தவர்கள் சக்திவேல், ஐயப்பன். இவர்கள் இடையே கடந்த அக்., 23ல், சிறுவாச்சூர் வழியே செல்லும் தனியார் பஸ்சில் சென்றபோது, தகராறு ஏற்பட்டது. பின், இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.


இதில் இரு தரப்பை சேர்ந்த, 6 பேர் காயம் அடைந்த நிலையில், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சக்திவேல், ஐயப்பன் புகாரில், தலா, 10 பேர் மீது, தலைவாசல் போலீசார், 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். அதில் ஐயப்பன் புகாரில், சிறுவாச்சூரை சேர்ந்த, கவுதம், 19, என்பவரை, போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடுகின்றனர்.

Advertisement