ரேஷன் அரிசி பறிமுதல் கடத்தியவருக்கு 'காப்பு'
சேலம், நசேலம், சின்ன திருப்பதியில், புட்செல் போலீசார், நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெருமாள் கோவில் அருகே, 'ஆக்ஸிஸ்' மொபட்டில் நின்றிருந்தவரிடம் விசாரித்தபோது, சேலம், பெருமானுார், பாரதியார் தெருவை சேர்ந்த சூர்யபிரகாஷ், 24, என தெரிவித்தார்.
அவரது மொபட்டில் இருந்த, 3 மூட்டைகளை சோதனை செய்ததில், தலா, 50 கிலோ வீதம், 150 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது. ரேஷன் கடைகளில் வாங்கி, மாவாக அரைத்து, மாட்டு தீவனத்துக்கு பயன்படுத்துவதாக, போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து மொபட்டுடன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை, போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'நிதானமின்றி' டூவீலர் ஓட்டும் இளைஞர்களுக்கு பல்லு பத்திரம்! வாரம் 50 பேருக்கு தாடை எலும்பு, பற்கள் அடிபடுது
-
காளை களைப்படைந்தது போல தெரிகிறது! :டெக்னிக்கல் அனாலிசிஸ்
-
மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை திரும்ப பெற விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
மதுரை தம்பதியின் 40வது உலக சாதனை
-
எக்ஸெல்சாப்ட் டெக்னாலஜிஸ்
-
சர்வதேச சிலம்பம்: மதுரைக்கு பதக்கம்
Advertisement
Advertisement