பொய் பாராட்டு பத்திரம் உறுத்தவில்லையா?
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள அரசு தொடக்க பள்ளி மற்றும் உயர் நிலை பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி தருவதாக கூறி, அப்பகுதி கவுன்சிலர் பள்ளி வகுப்பறைகளை இடித்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் வகுப்பறை கட்டி தரவில்லை. இதனால், மாணவர்கள் கோவில் வளாகத்தில் படித்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இப்படி, தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிப்பதும், கோவில் வளாகத்தில் வகுப்பறைகள் நடப்பதும் வாடிக்கையாகி விட்டது.
பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ். தி.மு.க., அரசு ஒதுக்கிய, 12,300 கோடி ரூபாய் என்ன ஆனது? தமிழகத்தின் கல்வியமைப்பை இப்படி மொத்தமாக சீரழித்து விட்டு, 'கல்வியில் சிறந்த தமிழகம்' என்ற விளம்பர விழா எடுத்து, தங்களுக்கு தாங்களே பொய் பாராட்டு பத்திரம் வாசித்து கொள்ள. தி.மு.க., தலைவர்களுக்கு உறுத்தவில்லையா?
- நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,
"தங்களுக்கு தாங்களே பொய் பாராட்டு பத்திரம் வாசித்து கொள்ள" - எழுதி கொடுத்த துண்டு சீட்டை தான் வாசிக்கிறார். பூனை மேல் மதில்.
அன்று பாரதி சொன்னான் "பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்". இந்தப் பாடல், பள்ளிகளை வெறும் கற்றல் மையங்களாகக் கருதாமல், ஆன்மிக மற்றும் அறிவுசார் கோயில்களாக மாற்ற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. அப்பா பார்த்தார் அதனால் மாணவர்களை கோவிலேயே இருந்து படிக்கட்டும் என்று செய்துவிட்டார். ஒதுக்கிய கோடி "ஸ்வாஹா". .......
கணக்கு காட்டுவதில் வல்லவர்கள்.ஆடிட்டர்கட்கும் டிமிக்கி தருவார்கள். உண்மை தெரிய வந்தால் அவர்கள் சொல்வது இது வேறு அது வேறு.மேலும்
-
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் எதிரொலி; வங்கதேசம் திரும்ப முயன்ற ஊடுருவல்காரர்கள் 300 பேர் கைது
-
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா; புட்டபர்த்தியில் பிரதமர் மோடி வழிபாடு: தினமலர் சேனலில் நேரலை
-
காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திகொலை; வாலிபர் கைது
-
கார் மரத்தில் மோதி விபத்து; மாணவர்கள் 3 பேர் பலி
-
காங்கிரசில் சேர விரும்பி ராகுலை சந்தித்தார் விஜய்
-
பீஹார் பா.ஜ., வெற்றிக்கு எஸ்.ஐ.ஆரே காரணம்