ரயிலில் கஞ்சா கடத்திய பொள்ளாச்சி வாலிபர்கள் கைது

அண்ணா நகர்: பெரம்பூர், முரசொலிமாறன் பூங்கா அருகில் ஆறு பார்சல்களுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த சந்திரகுமார், 28, ஷியாம் சந்துரு, 19, ஆகிய இருவரையும், அண்ணா நகர் மதுவிலக்கு போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த இருவரும், ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் இருந்து கஞ்சா வாங்கி, ரயிலில் சென்னை வழியாக கடத்தியது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 12.40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement