பெண் டாக்டர்களிடம் அத்துமீறல்: வம்சாவளி இந்தியர் கைது
ஒட்டாவா: கனடாவில் பெண் டாக்டர்கள் உள்பட பெண் மருத்துவ ஊழியர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இந்திய வம்சாவளி நபரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக பீல் பிராந்தி போலீசார் கூறியதாவது; உடல்நிலை சரியில்லை எனப் பொய்யாக கூறி, வைபவ் என்ற நபர், பெண் டாக்டர்கள் பணியாற்றும் மருத்துவமனைக்கு சென்று, டாக்டர்களிடமும், பெண் மருத்துவ ஊழியர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். பல மாதங்களாக இதே வேலையை செய்து வந்துள்ளார்.
இது தொடர்பாக புகார் அளித்த பெண் மருத்துவ ஊழியர்கள், தங்கள் முன்பு ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், போலியான பெயர் மற்றும் அடையாளத்துடன் தங்களை அணுகியதாகவும் கூறியுள்ளனர்.
கடந்த டிசம்பர் 4ம் தேதி கைது செய்யப்பட்டுள்ள வைபவ் தற்போது விசாரணைக்காக போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல், லாப நோக்கத்துடன் போலி அடையாளத்தை பயன்படுத்தியது, ஆவண திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மேலும்
-
ரூ.33 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்த 10 நக்சல்கள் சத்தீஸ்கரில் சரண்!
-
வீர சாவர்க்கருக்கு உரிய அங்கீகாரம் ஒருபோதும் கிடைக்கவில்லை: மத்திய அமைச்சர் அமித் ஷா
-
ஆறாவது இடத்தில் இந்தியா * டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பின்னடைவு
-
நியூசிலாந்து அபார வெற்றி * வெலிங்டன் டெஸ்டில்...
-
அசாதாரண சூழ்நிலைகளில் விமான கட்டணத்தை அரசு கட்டுப்படுத்த முடியும்: மத்திய அரசு
-
காவிரி விவகாரத்தில் தமிழக உரிமைகளை விட்டுக் கொடுப்பதே திமுகவுக்கு வாடிக்கை; இபிஎஸ் காட்டம்