இந்தியாவுடன் கருத்து வேறுபாட்டை உருவாக்க முயற்சி; அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு
நமது நிருபர்
அமெரிக்கா சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே பொய்யான கதைகள் மூலம் கருத்து வேறுபாட்டை உருவாக்குகிறது. இந்தியாவுடனான எல்லை நிலைமை நிலையானது என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனா இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்படும் என்று அமெரிக்காவின் பென்டகன் அறிக்கை வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கையில், ''சீனா அதன் நட்புநாடான பாகிஸ்தானைப் போல, ராணுவத்தின் மூலம் தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கும். எனவே, இனி வரும் ஆண்டுகளில் இந்தியா - சீனா இடையிலான உறவு பாதிக்கப்படும்'' என பென்டகன் கூறியிருந்தது.
இந்த அறிக்கையை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது: பென்டகனின் அறிக்கை சீனாவின் பாதுகாப்புக் கொள்கையை திரிக்கும் வகையில் உள்ளது. சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே பொய்யான கதைகள் மூலம் கருத்து வேறுபாட்டை உருவாக்குகிறது.
இந்தியாவுடன் முரண்பாடுகளை உருவாக்குகிறது. இந்தியாவுடனான எல்லை நிலைமை நிலையானது. அமெரிக்கா தனது ராணுவ மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு சாக்குப்போக்கைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சீனா இந்த அறிக்கையை உறுதியாக எதிர்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்கா வின் உண்மை முகமும் அதன் வேலையும் இதுதானே, எந்த நாட்டையும் முன்னேறவோ, ஒன்றுசேரவோ விட கூடாது, அப்போதுதான் உலக போலீஸ்சாக தான் இருக்கலாம், தன் இடத்துக்கு போட்டியாக அல்லது இடஞ்சல்கொடுக்க வேறு எந்த நாடுகள் வளர்ந்துவிட கூடாது, அவர்களுக்கு அடிதடி சண்டை போர்களை உருவாக்கி முட்டி மோதி வைத்து, குளிர்காய வேண்டும், தான்தான் மிகபெரிய ஆயுத விற்பனை டானாக இருக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோட்டை சரியதுவங்கியுள்ளது
துரோகிகளை விட எதிரிகள் எவ்வளவோ மேல் ...இந்தியா அமெரிக்காவை இனிமேல் நம்பக்கூடாது...
இது முற்றிலும் உண்மை isis போன்ற தீவிரவாத இயக்கத்தை உருவாக்கியதே அமெரிக்கா தான்
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அமெரிக்கா என்ற நாடு இந்த பூமியில் மட்டும் தோன்றாமல் இருந்திருந்தால் இந்த பூமியில் தீவிரவாத விதைகளே முளைத் திருக்காது. பூமியில் எங்கும் அமைதி இருந்திருக்கும். அப்படியென்றால் அன்றே இந்திய துணைக்கண்டத்தில் ஆரியர்கள் படையெடுத்து வந்தார்கள். அதன் பின்பு சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமியர்களின் படையெடுப்பு. அதன் பின்பு உதயமானதுதான் பாகிஸ்தான் வங்கதேசம் ஆப்கானிஸ்தான் மௌரிஷஸ் ஈரான் போன்ற நாடுகள். இதுமட்டும் எப்படி? எந்த நாடும் வன்முறையும் தீவிரவாதமும் இல்லாமல் தோன்றி இருக்கின்றதா?
டிரம்ப் இவ்வளவு கீழ்தரமாக போகக் கூடியவர்தான். அவர் ஒரு கீழ்த்தரமான ஆளுதான்.மேலும்
-
வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்
-
மீண்டும் தேர்தல் அறிக்கை குழு... முதல்வருக்கு கூச்சமாக இல்லையா? கேட்கிறார் அண்ணாமலை
-
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முற்றுகை; இடைநிலை ஆசிரியர்கள் கைது
-
பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி
-
ஆந்திராவில் அதிகாலை பயணத்தால் சோகம்: பஸ் மீது கார் மோதியதில் 4 பேர் பலி
-
2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை